India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மதிப்பீட்டு முகாம் மாவட்ட நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மத்திய அரசின் அளிம்கோ நிறுவனம் சார்பில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர்.
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள இறகு பந்து உள் விளையாட்டரங்கில் காலை 5 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இறகு பந்து விளையாடும் வசதி உள்ளது.இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக குறைந்த உறுப்பினர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இறகு பந்து விளையாட வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான சிறந்த பங்களிப்பிற்காக க்ரின் சாம்பியன் விருது கல்வி நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் தொழில்துறை அரசு சாரா நிறுவனங்கள் தனி நபர் ஆகியோருக்கு தனித்தனியாக ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் வழங்கப்பட உள்ளது விவரங்களுக்கு https://tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் பணிபுரிய 5. 3.25 க்குள் விண்ணப்பிக்கலாம். உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர் தேர்வு குழு மூலம் நடைபெறும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரம் அறிய தொடர்புடைய நன்னடத்தை அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான நீச்சல்குளம் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீச்சல் குளத்தினை பயன்படுத்தலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த அளவு பயிற்சி கட்டணம் மட்டுமே. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நீந்தி பயன்பெறுங்கள் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அழைப்பு விடுத்திருக்கிறார்
நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆற்றுப்படுத்துநா் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 05/3/2025 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.209, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விண்ணப்பங்களை கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்.
நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்குவதற்கு உளவியல் கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற தகுதியானவர்கள் ஆற்றுப்படுத்துனர் பதவிக்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதிக்குள் மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய்வதற்கு 9 மாதகால அவகாசத்துடன் குழு அமைத்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் நாகப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்; மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் வரும் 20ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு கீழ்வேளூர் மற்றும் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.