India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணியினர் சார்பில், இந்து அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நாகையிலிருந்து திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மாவட்ட து.தலைவர் செழியன், இந்து முன்னணி மாவட்ட து.தலைவர் பிரபு, நகர செயலாளர் சேரலாதன் உள்ளிட்ட பாஜக, இந்து அமைப்புகளை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து வீட்டு சிறையில் வைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல் தொடர்பான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப.ஆகாஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டி.கே.அருண் கபிலன் மற்றும் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் Drug Free TN என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் போதை பொருள் விற்பவர்களை ரகசியமாக இதன் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டம், பிரதான் மந்திரி அனுஷித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்றவற்றில் பயன் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.3) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது நாகை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுனாமியில் மீட்டகப்பட்ட குழந்தைகளான சவுமியா மற்றும் மீனாவை அரவணைத்து காப்பகத்தில் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.2) இரண்டாவது மகள் மீனாவிற்கு, வங்கி ஊழியர் மணிமாறன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது ராதாகிருஷ்ணன் கண்கலங்கினார்.
காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி வரை சென்று வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை – புனலூர் விரைவு ரயிலை காரைக்கால் வரை இயக்க வேண்டும் என நாகூர் – நாகை ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையங்கள் துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் நாகரத்தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோயில் செயல் அலுவலர் மற்றும் நாகப்பட்டினம் நகர போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பிரதான சாலையில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விபத்து எச்சரிக்கை பலகையில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.