Nagapattinam

News March 28, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

News March 27, 2025

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற அடுக்க அடையாள எண் அவசியம்

image

நாகை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண்ணை பெறாத விவசாயிகள் மார்ச் 30ஆம் தேதி அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க பெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 27, 2025

கால்நடை பண்ணை அமைக்க மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில் நாட்டுக்கோழி, செம்மறி ஆடு, வெள்ளாட்டு பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் https://nim. udyamimitra.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

News March 26, 2025

நாகை அருகே 1100 ஆண்டு பழமையான கோயில்

image

நாகை அருகே திருநாங்கூரில் அமைந்துள்ளது மதங்கீஸ்வரர் ஆலயம். இது 11 சிவதலங்களில் ஒன்றாகும். இது 1100 ஆண்டுகள் பழமையானது. பேச்சு வராத குழந்தைகளை இங்கு அமரச் செய்து நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் பேசத் தொடங்குவதும், திருமணமாகாதவர்கள் அஷ்டமி அன்று மட்டை உரிக்காத தேங்காயை அர்ச்சனை செய்து அதை வீட்டில் வைத்து 11 மாதம் வழிபட்டால் திருமணமாகும் என்பது ஐதீகம். SHARE செய்யவும்

News March 26, 2025

நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 26, 2025

நாகை: 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News March 26, 2025

வேதாரண்யத்தில் இன்று மதியம் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியர் பள்ளியில் 26.03.2025 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் அகஸ்தியர்பள்ளியில் புறப்பட்டு திருவாரூர் செல்கிறது. இதில் இரயில்வே மிக உயர் அதிகாரிகள் 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து வழித்தடங்களில் ஆடு மாடுகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

நாகையில் டேக்வாண்டோ பயிற்சி விரைவில் தொடக்கம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் டேக்வாண்டோ பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவை காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 80720 55361 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!