Nagapattinam

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

நாகை கலங்கரை விளக்கத்தின் சிறப்பு

image

தமிழக கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் நாகை கலங்கரை விளக்கம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. நாகையில் 1985ம் ஆண்டு 48 மீ உயரமுடைய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வங்க கடலின் அழகையும், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரத்தை பார்வையிட்டு ரசிக்க முடியும். 163 அடி உயரம் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கும் நாகையின் அடையாளம். SHAREIT

News February 12, 2025

குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

image

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனி, பகுதியைச் சேர்ந்த அருள் சக்தி என்பவர் அருகில் குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் போலீசாரக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 12, 2025

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர்கள் உடன் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

News February 12, 2025

திமுக அலுவலக திறப்பிற்கு அமைச்சருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான என்.கௌதமன் மகன் திருமண விழா திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 3-3-2025 அன்று நடைபெற உள்ளது. திருமண விழாவிற்கான அழைப்பிதழ், மற்றும் மாவட்ட திமுக அலுவலக திறப்பு விழா அழைப்பிதழ்களை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இன்று கௌதமன் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.

News February 12, 2025

துணை முதல்வரிடம் அழைப்பு வழங்கிய திமுக நிர்வாகி

image

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான என்.கௌதமன் மகன் திருமண விழா திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 3-3-2025 அன்று நடைபெற உள்ளது. திருமண விழாவிற்கான அழைப்பிதழ், மற்றும் மாவட்ட திமுக அலுவலக திறப்பு விழா அழைப்பிதழ்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று கௌதமன் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.

News February 12, 2025

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் முதிர்வு தொகை

image

நாகை மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2002 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் வைப்பு தொகை பத்திரம் பெறப்பட்ட 18 வயது முதிர்வடைந்த பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை பெற சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

கப்பல் போக்குவரத்து தேதி மீண்டும் மாற்றம்

image

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சிவகங்கை என்ற பெயரில் சுபம் தனியார் நிறுவனம் கப்பல் போக்குவரத்தை துவக்கி பின்னர் கடந்த நவம்பர் மாதம் நிறுத்தியது. மீண்டும் நாளை 12ஆம்  தேதி முதல் கப்பல் சேவை தொடரும் என அறிவித்து இருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதி இன்னும் கிடைக்காத காரணத்தால் 16ஆம் தேதி முதல் கப்பல் இலங்கை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

கோரக்கர் ஆசிரமத்தில் சாதுக்களுக்கு அன்னதானம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாதுக்களுக்கு நித்தியானந்தம் குடும்பத்தினர் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கினர். இதில் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் உள்ள சாதுக்கள் பங்கேற்று உணவு உட்கொண்டனர்.

News February 11, 2025

நாகையில் இசை திறமைக்கு வாய்ப்பு

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கடற்கரையில் ‘நம்ம நாகை, நம்ம இசை’ எனும் இசை நிகழ்ச்சி 23ஆம் தேதி நடக்கிறது. இதில் முதல் பரிசு ரூ.10,000; இரண்டாம் பரிசு ரூ.7,500; மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்பட உள்ளது. இதில் இசை திறமை கொண்டவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு வெல்லலாம். மேலும் விவரங்களுக்கு 8281431707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!