India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத்துறையில் இருக்கும் 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த<
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: சிக்கல் சிங்காரவேலர் கோயில், சோவிராஜா பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன், நீலதாட்சட்டி அம்மன் கோயில், திருமறைக்காடார் திருக்கோவில், வலம்புரநாதர் திருக்கோவில், காயாரோகணேசுவரர் கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
நாகை மாவட்டத்தில் DEEP Teacher Ambassador இன் இரண்டாவது வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவில் PET ஆசிரியர்களை ஆசிரியர் தூதர்களாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு விண்ணப்பிக்க http:// Forms gle/TKrupJ3noNkh7SHd9 ல் பதிவிறக்கம் செய்து வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகையில் புகழ்பெற்ற சிக்கல் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்தியாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.
ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திலிருந்து வெளியேறி கடற்கரை பகுதிக்கு சென்ற புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதில் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வன உயிரின சரணாலயத்தில் புள்ளிமான்கள் மற்றும் வெளிமான்கள் உள்ளன.
அக்னி வீர் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இதற்கான கடைசி தேதி தற்போது ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.