India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய்வதற்கு 9 மாதகால அவகாசத்துடன் குழு அமைத்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் நாகப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்; மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் வரும் 20ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு கீழ்வேளூர் மற்றும் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை -இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பிப்ரவரி 22ஆம் தேதி துவக்கம் சிவகங்கை தனியார் கப்பல் நிறுவனம் அறிவிப்புமேலும் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிப்.17 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை காண காசோலையினை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப.ஆகாஷ் அவர்கள் வழங்கினார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி ஊன்றுகோல் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் போன்றவை விலையில்லாமல் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 19ஆம் தேதி காலை வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடக்கிறது. எனவே மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நாகை கிளை டெப்போவிற்கு தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ள தகுதியான நபர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 94423 46036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஆகியவற்றின் சார்பில் பத்து பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி கடற்கரைகளில் திமிங்கலம், கடல் ஆமைகள் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். இந்நிலையில், விழுந்தமாவடி அருகே மணல்மேடு கடற்கரையோரத்தில் சுமார் 5 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் இறந்த நிலையில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஸ்மார்ட் கார்டில் கைரேகை வைப்பது அவசியம். அதுபோல் ஸ்மார்ட் கார்டில் ஆதார் எண் இணைப்பதும் அவசியமாகும். இவை இரண்டும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாது. இதனால் ஆதார் விடுபட்டு போனவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் ஸ்மார்ட் கார்டில் கைரேகை வைக்காமல் உள்ளவர்களிடம் கைரேகை வைக்கும் பணி நீலப்பாடி ரேஷன் கடையில் வட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.