India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்
நாகை அருகே புத்தூர் பகுதியில் இன்று போலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மீன் ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் மீன் ஜஸ் பெட்டிக்குள் மீன், நண்டுகளுக்கிடையே புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை பதுக்கி கடத்தி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து 1லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருவாகம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், வேதாரண்யம் வட்டாரத்தில் உள்ள பத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி, உடல்நலம், குழந்தை திருமணம், பாலினச் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நாகை மாவட்ட பொதுசுகாதாரத் துறை லேப் டெக்னீஷியன், செவிலியர்கள், ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர், பல் தொழில்நுட்ப வல்லுநர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ரூ.60,000 வரை சம்பளத்தில் உள்ள 28 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு <
அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தனி அடையாளம் கொண்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை உள்ளவர்கள் மட்டுமே இனிமேல் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் விவசாய கடன் பெற முடியும். மாவட்டத்தில் சுமார் 7000 விவசாயிகள் இந்த அட்டை பெறவில்லை. இந்த அட்டை பெற நாளையே (மார்ச்.31) கடைசி நாள் எனவே விவசாயிகள் உடனே தங்கள் அடையாள அட்டையை பெற்றிடுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுகிறது. மாணவ,மாணவிகள் தேர்வுகள் எழுதுவதை வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 42 மையங்களில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. இதில் 138 பள்ளிகளை சேர்ந்த 4425 மாணவர்கள் 4219 மாணவிகள் என மொத்தம் 8444 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இன்று நாகை நடராஜன் தமயந்தி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.