Nagapattinam

News April 3, 2024

நாகை: பண்டல் பண்டலாக சாராயம் பறிமுதல்

image

நாகை அடுத்த பாப்பா கோயிலில் உள்ள வீடு ஒன்றில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று மேற்கொண்ட சோதனையில் ஒரு வீட்டில் பண்டல், பண்டலாக சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பழனி என்பவரை கைது செய்து மற்றொருவரை தேடிவருகின்றனர்.

News April 2, 2024

நாகை வேட்பாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

image

நாகை தொகுதியில் தேர்தல் செலவு கணக்குகளை செலவின பார்வையாளர் குழு கண்காணித்து வருகிறது.
வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை தனி வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை வரும் 8, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்த நாம் தமிழர்

image

நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கார்த்திகா இன்று செருதூர் மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்களுடன் அமர்ந்து மீன் விற்பனை செய்தும், மீன்களை சுத்தம் செய்தும் வாக்கு சேகரித்தார். அவருடன் அக்கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உட்பட பலர் இருந்தனர்.

News April 2, 2024

சர்வதேச சதுரங்கப்பட்டியலில் இடம் பெற்ற நாகை மாணவி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமொழி, கவிதா தம்பதியினரின் மகள் மகதி சர்வதேச சதுரங்க பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு பயிலும் இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், இவர் நாகை மாவட்ட அளவில் சர்வதேச சதுரங்கப்போட்டியில் இடம்பெற்ற முதல் பெண் சதுரங்க ஆட்டக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு கடிதம்

image

நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை-2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி அகரகொந்தகை கிராமத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கையெழுத்திட்ட நேர்முக கடிதத்தை அஞ்சலில் அனுப்பி வைக்க வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைத்தார்.

News April 1, 2024

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி (ம) கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.அரங்கநாதன் உள்ளனர். 

News April 1, 2024

திமுக சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு

image

நாகை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேளாங்கண்ணி திமுக பேரூர் கழகம் சார்பில் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பணி மனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News April 1, 2024

மக்கள் வெள்ளத்தில் வேளாங்கண்ணி கடற்கரை

image

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த பலரும் மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பொழுதைக் கழிக்க ஒரே நேரத்தில் கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் வெள்ளத்தால் கடற்கரை நிரம்பி வழிந்தது.

error: Content is protected !!