India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட். கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நேற்று நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சி.பி.எம். மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நாகை எம்.பி.செல்வராசு, திருத்துறைபூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு கடந்த 16.03.2024 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, நாகை தொகுதியின் வேட்பாளராக சுர்ஜித் சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட தேன்மொழி கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ,எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.தற்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ம. செல்வராசு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7034 மற்றும் 04365 – 252594,252595,252 599 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைப்பெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நாளை முதல் (18.3.24) ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.