Nagapattinam

News April 27, 2024

நாகை விவசாயிகளுக்கு முக்கிய ஆலோசனை

image

நாகை வேளாண்துணை இயக்குனர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளைநிலங்களை கோடை உழவு செய்வதன் மூலம் வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள் அனைத்தும் மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது . இதனால் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும். எனவே கோடை உழவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

பட்டாசு வெடித்ததில் முதியவர்

image

கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில் பத்து கிராமத்தில் உள்ள தூண்டி வீரன் கோயிலில் ஆண்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வாகனங்களில் குதிரை, சுவாமி சிலைகளை ஏற்றி வரும்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அதிக சத்தத்தோடு பட்டாசு வெடித்ததில் முதியவர் பயந்து ஓடியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 27, 2024

விபூதி காப்பு அலங்காரம்

image

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்திரை பெருவிழாவின் 13 ஆம் நாளான நேற்று இரவு சர்வ பிராயச்சித்தா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரா பௌர்ணமி முன்னிட்டு இரண்டரை தினங்கள் தொடர்ந்து பாலபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், முருகனின் திருமேனியில் படிந்த பாலாடைகள் அனைத்தும் அபிஷேக திரவியங்கள் கொண்டு எடுக்கப்பட்டு தற்போது விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News April 26, 2024

நாகையில் ஆண் சடலம் மீட்பு 

image

வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் செருதூர் மீனவ கிராம கடற்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

நாகை: ரத்ததானம் அளிக்க கோரிக்கை

image

நாகையில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை தற்போது ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரத்ததானம் அளிக்க முன் வருவோர் 15கி.மீ  சென்று ரத்ததானம் அளிக்க வேண்டியுள்ளதால் ஒரு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் ரத்ததானம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 25, 2024

நாகையில் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரிந்த 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் கொண்ட விருதினை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் சென்று மே.15க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நாகையின் கோடியக்கரை கடற்கரை சிறப்பு!!

image

பாயிண்ட் காலிமர் முனை என்றழைக்கப்படும் கோடியக்கரை கடற்கரை நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. தேவராப்பாடலிலும் இக்கடற்கரை இடம்பெற்றுள்ள இங்கு 2004இல் அழிந்த சோழர்கால கலங்கரை விளக்கத்தின் எச்சம் காணப்படுகிறது. 12 கி.மீ நீளமுள்ள இக்கடற்கரையில் 250க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.

News April 25, 2024

நாகையில் நாம் தமிழர் கட்சி கண்டனம்

image

நாகை அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தமிழக அரசு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு இன்று முதல் இடம் மாற்றம் செய்துள்ளது மக்களை பெரிதும் பாதிக்கும் அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சி நாகை மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 25, 2024

செல்லமுத்து மாரியம்மனுக்கு செடில் உற்சவம்

image

கீழ்வேளுர் அருகே உள்ள தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை செடல் மரத்தில் அமர்த்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

News April 24, 2024

நாகை: பாலம் கட்டும் பணி தீவிரம்

image

நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி சின்ன வடக்குவெளி பகுதியில், சிறு பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலின் கோரிக்கை சிறுபாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடியும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!