India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் அவர்களின் தந்தை ஆர்.தூண்டி இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி ஊர்வலம் 08.05.2024 இன்று வாழக்கரை அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருமருகல் ஊராட்சியில் இன்று நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களுக்கு வழங்குதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
கோடியக்கரை சரணாலயம், 1967-ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான கடல் பறவைகள் இங்கு தென்படுகின்றன. சதுப்பு நிலமாக இருப்பதால் அரிய பறவைகளை இங்கு காணமுடியும். மேலும் நரி, புள்ளிமான் போன்ற விலங்குகளின் வாழ்விடமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.
சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் விஜயகுமார் அறிவுரையின்படி பல்வேறு இடங்களில் ORS உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் லயன்ஸ் கிளப் உதவியுடன் பொதுமக்கள், பேராலயத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கு ORS உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் இன்று இலவசமாகவழங்கப்பட்டது .
வேளாங்கண்ணி ஆர்சியிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் மாரியம்மன் கோவில் அருகே பிரதான குறுகிய சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையின் நடுவே திடீரென சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் பேருந்து மற்றும் கார் சென்றால் கூட பாதசாரிகள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாததால் உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சென்டர் மீடியனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் நிகில், நிர்மல் இரட்டையர்களான இருவரும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அசத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புறாகிராமம் உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு உட்பட 8 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி,1 சுயநிதி பள்ளி,8 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 18 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், நாகை மாவட்டத்தில் தேர்ச்சி 91.19% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 88.81 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 93.06% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற வரும் ஜல் ஜீவன் திட்டத்தின் குடிநீர் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு நேரடி ஆய்வில் ஈடுபட்டனர். நாகையில் உள்ள குடிநீர் வாரிய அதிகாரியிடம் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு அனைத்து பணிகளையும் கேட்டறிந்தார்
Sorry, no posts matched your criteria.