India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், மே. 1 தேதியும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர் பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம் ரமேஷ் நேற்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர், குருமனாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், “ இந்து மட்டுமின்றி இஸ்லாமியர், கிருஸ்தவர் மக்களிடையே பாஜகவிற்கு மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உள்ளது” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி தலைமை தாங்கினார்
திருவாரூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் வருண் சோனி முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பாரதி மார்க்கெட் அருகே மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மில் ஓவர் லோடு காரணமாக இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள அரியபத்திரப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். உடனடியாக தகவறித்து வந்த மின்வாரியத்துறையினர் விரைந்து பழுதை நீக்கியதால் மீண்டும் மின் விநியோகம் சீரானது.
நாகை மக்களவைத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடி வரும் பாஜக கட்சி தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்றார். பின்னர், அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகை: தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசகூடாது,
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கனிவுடன் பதில் கூற வேண்டும். கோபமான வார்த்தைகளால் வாக்கு மையத்தில் பிரச்சனை எழுந்து விடாமல் போலீசார் பணியாற்ற வேண்டுமென நாகை போலீஸ் எஸ்.பி ஹர்சிங் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே டிஎஸ்ஓ ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ.1,78,200 இருப்பது தெரிய வந்தது. இப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினரால் வரும் முதல் செய்யப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் வேறு மாவட்டத்தில் வாக்குகள் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், அரசு அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதனை நாகை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ஏப்ரல். 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஜானிடாம் வர்கிஸ், காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா பேபி உடன் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.