Nagapattinam

News July 4, 2024

நாளை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

ரயில்வேதுறை அமைச்சரிடம் நாகை எம்பி மனு

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை தொடங்கிட வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து நாகை எம்பி வை.செல்வராஜ் கோரிக்கை மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்

News July 3, 2024

நாகை ஆட்சியர் வேண்டுகோள்

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால், நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணங்கள், நினைவு சின்னம், செய்திதாள்கள், அஞ்சல் உறைகள், ரூபாய் தாள், நாணயங்கள் உள்ளிட்டவைகளை நாகை அருங்காட்சியகத்தில் தர வேண்டுமென ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.

News July 3, 2024

நாகை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 – 25ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள், நேரடியாக கல்லுரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04365-250129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

News July 2, 2024

இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பரிசு தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

News July 1, 2024

55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம்

image

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கண்பார்வை இழப்பை தடுப்பதற்காக ஜுலை மாதம் முழுவதும் வைட்டமின் யு திரவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் யு திரவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 55 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்,

News July 1, 2024

பள்ளிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்க அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்ச வைப்பு தொகை ஏதுமில்லாமல் மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன் அடையலாம். இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

நாகை மாவட்டத்திற்கு மழை…!

image

சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 30, 2024

நாட்டுக்கோழி வளா்க்க மானியம்

image

நாகை மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி ஜூலை 10க்குள் விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.

News June 29, 2024

நாகை விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!