Nagapattinam

News June 1, 2024

நாகையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் இந்திய வேளாண்மை திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் தேனீ வளர்ப்பு பயிற்சி ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 04365-299 866 மற்றும் 80567086 63 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரி அறிவிப்பு

image

திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையம் செயல்படுகிறது. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி இங்கு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பதிவு நடைபெறும் என கல்லூரி முதல்வர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

பூச்செரிதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி

image

நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு கையில் ஏந்திய படி கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூச்செரிதல் மற்றும்
காப்பு கட்டும் நிகழ்ச்சி
நடைபெற்றது .பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News May 31, 2024

சிக்கல்: பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து

image

நாகை மாவட்டம் சிக்கலில் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக இங்குள்ள பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் மள மளவென தீ பற்றியதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

News May 31, 2024

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் கலை இலக்கியம் விளையாட்டு கல்வி மருத்துவம் அறிவியல் மற்றும் தொழில்துறை சமூக பணி மற்றும் தொழில்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் Award.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். 

News May 31, 2024

எட்டுக்குடி கோவில் கலசங்களில் தங்கமுலாம்: கோயில் மறுப்பு

image

எட்டுக்குடி முருகன் கோயில் கோபுரத்திலுள்ள கலசங்களுக்கு சுமார் 1000 கிராம் அளவிற்கு தங்க முலாம் பூசப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள 8 கோபுரங்களுக்கு 8 கிராம் வீதம் 64 கிராம் மட்டுமே தங்கம் மூலம் பூசப்பட்டதாகவும் , வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் கோயில் செயல் அலுவலர் கவியரசு தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

நாகப்பட்டினம் நாகை துறைமுகம் சிறப்பு!

image

நாகப்பட்டினத்தில் துறைமுகம் இடைக்கால சோழர் காலத்தில் இந்த துறைமுகம் முக்கியாக இருந்தது. நாகப்பட்டினம் மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16 நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 1660இல் இருந்து டச்சுக் காரர்களிடமிருந்த இது, 1781இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தரங்கம்பாடி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் சேர்க்கப்பட்ட பின் இந்த துறைமுகம் சரிவை சந்தித்தது.

News May 30, 2024

ஜூன் மாதத்திற்கான பொருட்கள் இறக்கும் பணி தீவிரம்

image

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு ஆயில் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பகுதியாக இன்று காலையிலேயே வேளாங்கண்ணி பகுதியில் உள்ள அரசு நியாய விலைக் கடைக்கு பணியாளர்கள் பொருட்களை இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News May 29, 2024

புகார் மனுக்களை பெற்ற நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத் தீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பங்கேற்று பொது மக்களிடம் 17 புகார் மனுக்களை பெற்றார். புகார் மனுக்கள் மீது உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

News May 29, 2024

மறு கட்டமைப்பை பார்த்து ரசித்த அதிமுக நகரச் செயலாளர்.

image

நாகை பழைய பேருந்து நிலையம் அருகே டச்சு காரர்களால் கட்டுப்பட்ட 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய பேதுரு ஆலயம் பழமை மாறாமல் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதிமுக நாகை நகரச் செயலாளரும், வழக்கறிஞருமான தங்க கதிரவன் பங்கேற்று மறுகட்டமைப்பை பார்த்து ரசித்தார்.

error: Content is protected !!