India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகையில் உள்ள வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனுக்கு வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செலுத்துவதே இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் விதை நெல்லை வைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள அம்மனை வேண்டினால் கேட்டது கிடைக்கும், நித்தம் வாழ்வில் துணை வருவார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள (BRANCH MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
வருகின்ற 10 – 4 – 2025 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தமிழ்நாடு வாணிப கழகத்தின் அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை SHARE செய்யவும்
நம்ம நாகப்பட்டினம் நம்ம திருவிழா நிகழ்ச்சிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உற்சாகமாக நேரலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பதிவு செய்யும் காலம் ஏப்.15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<<-1>> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.
நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சென்று மூலவரான காயாரோகணேஸ்வரரை வழிப்பட்டால் வாழ்வின் கர்ம வினைகள் என்று சொல்லக் கூடிய தற்போதைய மற்றும் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சஞ்சலங்களும் இன்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பது ஐதீகம். கர்ம வினைகள் நீங்குவதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.