India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 28 தற்காலிக பணி இடங்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். வேலை தேடுபவர்களுக்கு இத்தகவலை SHARE செய்யவும்..
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலை குழுக்கள் நையாண்டி மேளம் கரகாட்டம் காவடி ஆட்டம் காளையாட்டம் கை சிலம்பாட்டம் பம்பை மயிலாட்டம் பறையாட்டம் கிராமிய பாட்டு பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலை குழுக்கள் தேர்வு மார்ச் 22 இன்று 10-5 மணி செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனமும் எதிரே வந்த சொகுசு கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் இரு வாகனங்களின் முன் பக்கங்களும் நசுங்கி சேதமடைந்தது. இதனால் இன்று அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. Share It
கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பேருந்து வசதியை ஏற்படுத்தும் வகையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு சிறிய பேருந்து (மினி பஸ்) இயக்க அனுமதி சீட்டுக்கான செயல்முறை ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் அவர்கள் நேற்று (21.3.25) வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள், தாட்கோ மூலம் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். 21 வயது முதல் 35 வயது உடையவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மூன்றாம் தளம் 321 மற்றும் 327 தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தால் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம். இங்கு முருகன் குழந்தைவரம் அருள்பவராக உள்ளார். சிவனின் சாபத்திற்கு ஆளான காமதேனு பசு இக்கோயில் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வசிஷ்ட முனி வெண்ணையை கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டார். பூஜை முடிந்து அதை எடுக்கையில் சிக்கி கொண்டது, ஆகையால் இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது. இந்த தகவலை SHARE செய்யவும்
நாகப்பட்டினம் DHS ஆனது 28 லேப் டெக்னீஷியன், செவிலியர்கள் , ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர், பல் தொழில்நுட்ப வல்லுநர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்,போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://nagapattinam.nic.in/ இலிருந்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கடைசி தேதி 05.04.2025 ஆகும். Share பண்ணுங்க
கடந்த ஜனவரி 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் 50 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பினர். இதில் நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31),குமரன் (28) தங்கள் சொந்த ஊருக்கு நேற்று வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கீழையூர் ஒன்றியம் கீழஈசனூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேசன் (53). இவர் காரப்பிடாகையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த கதவு பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ், 1/2 பவுன் மோதிரம் ,1/2 பவுன் தோடு என 3 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.