Nagapattinam

News May 16, 2024

ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேபி தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு

image

நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு மாதமாக பாமாயில் விற்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து பாமாயில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமாயில் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News May 16, 2024

நாகை: விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் வரும் 25 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் ஜூன் 10 ஆம் தேதி மீன்வளத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே படகு உரிமையாளர்கள் படகின் பதிவுச் சான்று, மின்பிடி உரிமம் உள்ளிட்டவைகளை ஆய்வு குழுவினரிடம் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பேபி நேற்று(மே 15) தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

நாகை – இலங்கை கப்பல் சேவை! மீண்டும் தேதி மாற்றம்

image

நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஏற்கனவே மே 17 ஆம் தேதி துவங்கும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அதன் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு மே 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த நபர்கள் கட்டணத்தை திரும்ப பெற விரும்பினால் customercare@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

News May 16, 2024

நாகையில் லேசான கடல் சீற்றம்!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வரும் நிலையில், மழை தீவிரமடைந்து இன்று(மே 15) அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் நாகை கடலோர கிராமங்களில் வழக்கத்தை விட சற்று அதிகமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பருவமாற்றம் காரணமாகவே இந்த லேசான கடல் சீற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 16, 2024

நாகையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

நாகை: தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

image

நாகை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(மே 16) நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் திறம்பட பணியாற்றிய போலீசாருக்கும் வெகுமதி, சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

News May 15, 2024

நாகை: பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்பு

image

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். பல புராணாக் கதைகளை தாங்கிய இதில், சிவன் வெண்மணலால் ஆன லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோவிலைச் சுற்றி பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்தியர் தீர்த்தக் குளங்களும் உள்ளன. இக்கோவிலில் நவகிரங்கள் அனைத்து வரிசையாக தெற்கு நோக்கி அமைந்திருப்பது தனித்துவமானதாகும்.

News May 15, 2024

மக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்ற நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில்,  நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.

News May 15, 2024

நாகை: ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

image

காரையூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிபவர் பிரபாகரன். அதே ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவராக வெங்கடசலம் பணிபுரிகிறார். இந்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி போவது குறித்து பிரபாகரன் வெங்கடாசலத்திடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலம் பிரபாகரனை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் திருக்கண்ணபுரம் போலீசார் வெங்கடாசலத்தை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!