Nagapattinam

News May 21, 2024

நாகை: 32 சவரன் நகை மீட்பு

image

நாகை அடுத்த நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் வீட்டில் கடந்த 8 ஆம் தேதி காணாமல்போன 32 சவரன் தங்க நகைகள் இன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர் சாதிக் கைது செய்யப்பட்டு அவர் திருடிச் சென்ற தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 21, 2024

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம்

image

நாகை காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ராமலிங்கம், மேற்கு நகர தலைவர் உதயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

News May 20, 2024

நாகை : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 19, 2024

வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

image

நாகை, வேளாங்கண்ணி அருகே சீராவட்டம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வேளாங்கண்ணியில் ஆன்மிக்ச் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பிய போது வயலில் கவிழ்ந்ததில் 17 பேர் காயம் அடைந்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், இவ்விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்தவிபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News May 19, 2024

நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை நாகை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 18, 2024

நாகை மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

பயணிகள் கப்பல் சேவை தேதியில் மீண்டும் மாற்றம்

image

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை சிவகங்கை என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை மே 13 முதல் துவங்குவதாக அறிவிப்பு வெளியாகி அதன் பின்னர் 2 முறை தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மே 19ஆம் தேதி கப்பல் சேவை இயங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் மறுதேதி அறிவிக்கப்படாமல் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News May 17, 2024

நாகை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

நாகை: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் ஐந்து படகுடன் கைது

image

இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

error: Content is protected !!