India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வரி வசூல் மையத்தில் வரிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று (ஜூலை 30) கள ஆய்வு மேற்க்கொண்டார். உடன்
நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் டி.லீனா சைமன் பங்கேற்றார்.
நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இயங்கி வரும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரிவர காவலர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இன்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தபோது அங்கு டி.எஸ்.பி முதல் கடைநிலை காவலர்கள் கூட இல்லாததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்து திரும்பி சென்றனர்.
பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 13ஆவது தேசிய ஜூனியர் பாரா தடகள போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. தமிழக அணியில் திருக்குவளை பகுதியை சேர்ந்த எஸ்.வீரசெல்வம் குண்டு எறிதல் போட்டியில் 3ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில், போட்டியில் வென்று சாதனை படைத்த வீரர் எஸ்.வீரசெல்வத்தை நாகை ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
நாகை மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் ஜூலை 31/07/2024 க்குள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், ஏக்கருக்கு ரூ.697.15 செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்-ஐ இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின் போது முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். உடன் பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் பகுருதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் (ஜூலை 29) வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி பங்கேற்றார்.
நாகை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களாக எட்டுக்குடி முருகன் கோயில் மற்றும் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளன. இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் எட்டுக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில் அரசின் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை மயிலாப்பூரில் ஆகஸ்ட்.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க நாளை (திங்கள்) கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண நிகழ்வில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார். நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடகா கே.ஆர்.எஸ் அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 100 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர் வளத்துறை ஆணைய செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் நாகை உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.