Nagapattinam

News May 29, 2024

மறு கட்டமைப்பை பார்த்து ரசித்த அதிமுக நகரச் செயலாளர்.

image

நாகை பழைய பேருந்து நிலையம் அருகே டச்சு காரர்களால் கட்டுப்பட்ட 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய பேதுரு ஆலயம் பழமை மாறாமல் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதிமுக நாகை நகரச் செயலாளரும், வழக்கறிஞருமான தங்க கதிரவன் பங்கேற்று மறுகட்டமைப்பை பார்த்து ரசித்தார்.

News May 29, 2024

நாகையில் 10 நாட்கள் இலவச பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மகளிர் குழு உறுப்பினர்களுக்கான 10 நாள் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியம், சாட்டியக்குடி கிராம சேவை மைய கட்டிடத்தில் நடந்த வகுப்பினை மகளிர் திட்ட இயக்குநர் முருகேசன் நேற்று தொடங்கி வைத்து அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்து லாபம் பெறுவது பற்றி விளக்கினார்

News May 29, 2024

இடம் பெயர்ந்த செம்பரி ஆடு மேய்ப்போர்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எந்த ஆண்டில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆட்டுகிடாய் போடுபவர்கள் குடும்பத்தோடு வந்துள்ளனர். குறிப்பாக திருக்குவளை, வலிவலம், இறையான்குடி, சிங்கமங்கலம் , கிள்ளுக்குடி, கடலாடிகுடி , அய்யடிமங்கலம் , கீரங்குடி, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வயல்களில் குடில் அமைத்து தங்கியுள்ளனர்.

News May 28, 2024

27 பேருக்கு ரூ.9,25,507 காசோலை வழங்கிய நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல்துறையில் பணி காலத்தின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ செலவிற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ் சிங் சேமநல நிதியில் இருந்து பெறப்பட்டு சுமார் ரூ.9,25,507 காசோலையை 27 பயணிகளுக்கு இன்று வழங்கினார்.

News May 27, 2024

நாகைக்கு புகழ் சேர்க்கும் நாகூர் தர்கா!

image

நாகப்பட்டினத்தில், நாகூர் தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமாக இவ்விடத்திற்கு பலதரப்பட்ட மக்களும் வருகை புரிவதே இதன் சிறப்பாக உள்ளது. இதன் கட்டடக்கலை தமிழ் இஸ்லாமியர்களின் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. இங்கு ஷாகுல் ஹமீது என்பவரின் கல்லறை அமைந்துள்ளது. இங்கு மத நல்லிணக்கம் மேம்படுத்தும் தலமாக இருந்து வருகிறது.

News May 27, 2024

நாகைக்கு புகழ் சேர்க்கும் நாகூர் தர்கா!

image

நாகப்பட்டினத்தில், நாகூர் தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமாக இவ்விடத்திற்கு பலதரப்பட்ட மக்களும் வருகை புரிவதே இதன் சிறப்பாக உள்ளது. இதன் கட்டடக்கலை தமிழ் இஸ்லாமியர்களின் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. இங்கு ஷாகுல் ஹமீது என்பவரின் கல்லறை அமைந்துள்ளது. இங்கு மத நல்லிணக்கம் மேம்படுத்தும் தலமாக இருந்து வருகிறது.

News May 27, 2024

நாகை: சாராயம் விற்ற 18 பேர் ஒரே நாளில் கைது!

image

நாகை நகர டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
8 எஸ்ஐ தலைமையில் போலீசார் 3 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் மஃப்ட்டியில் மதுவிலக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாகை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திட்டச்சேரி, திருமருகல், வலிவலம் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாராய கடத்தல் மன்னன்கள் 4 பேர் உட்பட 18 பேரை அதிரடியாக நேற்று(மே 26) கைது செய்தனர்.

News May 26, 2024

நாகூர் தர்கா குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

image

நாகப்பட்டினம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் குளம் உள்ளது. இக்குளத்தில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மகன் நஜ்முதீன் இன்று தர்கா குளத்தில் குளிக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 26, 2024

நடிகர் ரிச்சர்டு ரிஷி வேளாங்கண்ணியில் வழிபாடு

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ஜி.மோகன் இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரிச்சர்டு ரிஷி வேளாங்கண்ணியில் வழிபாடு செய்தார். அவருக்கு பேராலயம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தார். இவர் நடிகை ஷாலினியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது

News May 25, 2024

நாகை அருகே சோகம்

image

திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியை சேர்ந்தவர் புலவேந்திரன் 57 வயதான இவர் உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்த புலவேந்திரன் கடந்த 21ம் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை 8.30 க்கு உயிரிழந்தார். கீழையூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!