Nagapattinam

News June 27, 2024

நாகை; சீர் மரபினர் மக்களுக்கு அறிவிப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

News June 27, 2024

நாகை: விவசாயிகள் குறித்த கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் ஒருபோக சாகுபடி செய்வதற்காகவும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 27, 2024

நாகை எழுத்தாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதை புத்தக தொகுப்பு வெளியிடவுள்ளது. இதற்காக எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வருகின்ற 10.07.2024க்குள் nagaibookfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 27, 2024

அரசு காஜி பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நாகை மாவட்டத்திற்கு அரசு காஜி தேர்வு செய்யப்பட உள்ளனர். முஸ்லிம் மதத்தில் நன்கு அரபி தெரிந்த ஆலிம்கள், அரபி கல்லூரி ஆசிரியர்கள் காஜி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 5ஆம் தேதிக்குள் மனு அளித்திட வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

நாகையில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

image

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் முருகையன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “100 நாள் பணியை உடனே தொடங்க கோரி நாகை மாவட்டத்தில் நாளை 100 இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

நாகையில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

image

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் முருகையன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “100 நாள் பணியை உடனே தொடங்க கோரி நாகை மாவட்டத்தில் வருகின்ற ஜுன் 28 ஆம் தேதி 100 இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

நாகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்க நாகை மாவட் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து 15 மனுக்களை பெற்றுக்கொண்டு, இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News June 26, 2024

படைப்பாளியா நீங்கள்? உங்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் 3வது புத்தக திருவிழா ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான லோகோ மற்றும் சுலோகம் அமைக்கும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு பெரும் லோகோ மற்றும் சுலோகம், புத்தக திருவிழாவிற்கு பயன்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு சான்று மற்றும் கேடயம் வழங்கப்படும். இந்நிலையில் தங்களது படைப்பினை ஜூன் 30ஆம் தேதிக்குள் nagaibookfair2024@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

News June 26, 2024

அயோடின் பற்றாக்குறை குறித்த ஆலோசனை கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அளவிலான இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News June 26, 2024

நாகை: நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

image

மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை குவித்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நேற்றிரவு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!