Nagapattinam

News April 11, 2025

நாகை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்

image

தலைஞாயிறு ஒன்றியம் நாகப்பட்டினத்திலிருந்து இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் தார் சாலை வெள்ளபள்ளம் அருகே சாலையில் சென்ற மினி சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாரா விதமாக திடீரென போஸ்ட் மரத்தில் மோதி எதிரில் வந்த அரசு பேருந்தின் முன்னால் நின்றுள்ளது. இதில் நல்வாய்ப்பாக பேருந்து பயணிகள் மற்றும் அந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும் உயிர் தப்பித்தார். இது குறித்து போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2025

நாகை: வேண்டியதை அருளும் முருகன்

image

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 10, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

image

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 9, 2025

நாகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு எண்கள்

image

நாகை மாவட்ட மக்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். ஆட்சியர் அலுவலகம் – 04365 – 253000, மகளிர் காவல்துறை – 04365-1091, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பேரிடர் கால உதவிக்கு – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்

News April 9, 2025

வரலாற்று சிறப்புமிக்க பகுதி

image

நாகையில் பல இடங்கள் சிறப்பு என்றாலும் பூம்புகார் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாக உள்ளது. இந்த கடற்கரையானது இயற்கையான மற்றும் பழமையான கடற்கரையாகும். சோழர்களின் துறைமுக நகரமாக விளங்கிய இக்கடற்கரை காவேரிப்பட்டினம்,புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நம்ம ஊர் பெருமைகளை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

அட்சயலிங்க சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

image

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழாவை நடைபெற்று வருகிறது. இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அஞ்சு வட்டத்தம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளநிலையில், அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News April 8, 2025

பழைய சாதம் நீர் அருந்த ஆட்சியர் வேண்டுகோள்

image

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எழுமிச்சை வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்சி, பழைய சாதம் நீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

error: Content is protected !!