Nagapattinam

News April 13, 2025

நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

image

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 13, 2025

நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

image

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

நாகையில் கடலில் தவறி விழுந்து மான்  

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திலிருந்து வெளியேறி கடற்கரை பகுதிக்கு சென்ற புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதில் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வன உயிரின சரணாலயத்தில் புள்ளிமான்கள் மற்றும் வெளிமான்கள் உள்ளன.

News April 13, 2025

நாகை: ராணுவ ஆட்சேர்ப்பு கடைசி தேதி நீட்டிப்பு

image

அக்னி வீர் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இதற்கான கடைசி தேதி தற்போது ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

நாகையில் கொளுத்தும் வெயில்

image

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News April 12, 2025

நாகை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

image

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

நாகை அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 12, 2025

மீன்பிடி தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

image

நாகையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

வணிகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். மே மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!