Nagapattinam

News March 21, 2025

நாகை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

நாகப்பட்டினம் DHS ஆனது 28 லேப் டெக்னீஷியன், செவிலியர்கள் , ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர், பல் தொழில்நுட்ப வல்லுநர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்,போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://nagapattinam.nic.in/ இலிருந்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கடைசி தேதி 05.04.2025 ஆகும். Share பண்ணுங்க

News March 21, 2025

இலங்கை சிறையில் இருந்து 50 நாட்களுக்குப் பிறகு நாகை திரும்பிய மீனவர்கள்

image

கடந்த ஜனவரி 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் 50 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பினர். இதில் நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31),குமரன் (28) தங்கள் சொந்த ஊருக்கு நேற்று வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News March 20, 2025

நாகையில்: பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

image

கீழையூர் ஒன்றியம் கீழஈசனூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேசன் (53). இவர் காரப்பிடாகையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த கதவு பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ், 1/2 பவுன் மோதிரம் ,1/2 பவுன் தோடு என 3 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை – அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தொகையை பெற அடையாள எண் அவசியம். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இலவசமாக அடையாள எண் பெற்றிட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உங்கள் பகுதியினருக்கு இந்த செய்தியை Share பண்ணுங்க.

News March 20, 2025

விவசாயிகளுக்கு 31ஆம் தேதி வரை ஆட்சியர் கெடு

image

நாகை, ஆட்சியர் அறிவிப்பில் நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 23033 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில் 15604 பேர் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 7429 விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு நலத்திட்ட உதவி, பயிர் கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதை உடனடியாக அனைவருக்கும் Share செய்யுங்கள்.

News March 19, 2025

விவசாயிகளுக்கு 31 ந்தேதி வரை ஆட்சியர் கெடு

image

நாகை மாவட்ட ஆட்சியர் இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 23033 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர் இவர்களில் 15604 பேர் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 7429 விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு நலத்திட்ட உதவி, பயிர் கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

பி எம் கிசான் திட்டத்தில் தவணைத் தொகை – அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இருபதாவது தவணைத் தொகை தொடர்ந்து பெற அடுக்க அடையாள எண் அவசியம். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இலவசமாக அடையாள எண் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

News March 19, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் தேர்வு வரும் 22ஆம் தேதி நடக்கிறது. நையாண்டி மேளம், கரகாட்டம், புரவி ஆட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை, கைசிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு வழங்கும் கலைக் குழுக்கள் செல்லூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

21ஆம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்

image

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கோட்டாட்சியர் திருமால் தலைமையில் நடக்கிறது. இதில் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!