Nagapattinam

News September 25, 2025

நாகை: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

image

நாகை மாவட்டத்தில் கீழையூர் வட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் ஏற்பட்டு இருப்பது வேளாண் அலுவலர்களால் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்தாமல் வேப்பெண்ணை சார்ந்த பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தவும் என மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளார்

News September 25, 2025

நாகை: மீனவர்கள் செல்ல தடை

image

தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் விசைபடகுகள் மற்றும் நாட்டுபடகுகளில் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநில கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 25, 2025

நாகை: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK-ஐ <<>>கிளிக் செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News September 25, 2025

நாகை: ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் தமிழ் வழிபள்ளிகளில் 6 – 12 வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் போது மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் பா. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

நாகை: கடலுக்கு செல்லாதா 5 ஆயிரம் மீனவர்கள்!

image

தமிழக கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 2000 பைபர் படகுகளும் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

News September 25, 2025

நாகை மக்களே இத Note பண்ணுங்க!

image

நமது நாகையில் இன்றும் நாளையும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
இன்று 25/9/2025
1) நாகப்பட்டினம் நகராட்சி – தேவர் சமுதாய கூடம், நாகை
2) திருமருகல் வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, கோட்டூர்
நாளை 26/9/2025
3) கீழையூர் வட்டாரம் – புயல் பாதுகாப்பு மையம், விழுந்தமாவடி
4) வேதாரண்யம் வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, செண்பகராயநல்லூர் வடக்கு

News September 25, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.24) இரவு 10 மணி முதல் இன்று(செப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 24, 2025

நாகை போலீஸ் சூப்ரண்ட் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று செப்.24ம் தேதி நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 19 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News September 24, 2025

வேளாண் மையங்களுக்கு ரூ.1கோடி நிதி

image

நாகை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் பெறும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் வேளாண் மதிப்பு கூட்ட மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்புவோர் நாகை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2025

நாகை மக்களே… வங்கியில் வேலை! APPLY NOW!

image

நாகை மக்களே.கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!