India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற (12.10.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற 582 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
புத்தூர் மதகடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் மனைவி ஹைஜா பீவி (62), இவர் நேற்று இரவு புத்தூர் மதகடி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்தது கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து பேருந்து தற்காலிக ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டை பெற, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு பதிவு செய்யலாம் (அ) ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் பதிவு செய்து பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் இயங்கி வரும் ஆயுதக் கிடங்கில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகள் தளவாடங்கள் கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படும் ஆயுதங்கள் பாதுகாப்பு உபகரணங்களை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆயுதங்களை கையாளும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீசாருக்கு விளக்கம் அளித்தார்.
மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
மயிலாடுதுறை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. மயிலாடுதுறை பெசன்ட் நகர் கண்ணார தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 6 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு மற்றும் ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (07.10.20.2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், வடவாமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி – மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
வங்கியில் இருந்து பேசுவதாகவும் குறைந்த வட்டியில் உடனடியாக லோன் தருவதாகவும் பொதுமக்கள் தங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.