Mayiladuthurai

News July 11, 2025

குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 31ஆம் தேதி கடைசி நாள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 37 ஆயிரத்து 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் 2 சதவீதம் என்ற விகிதத்தில் பிரீமியமாக ஏக்கருக்கு ரூ. 752 செலுத்த வேண்டும். எனவே உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News July 11, 2025

மயிலாடுதுறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மண்டல அளவிலான குறைதீர் கூட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

மயிலாடுதுறை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! மேலும் தகவலுக்கு <<17029624>>பாகம் 2<<>>

News July 11, 2025

மயிலாடுதுறை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

News July 11, 2025

மயிலாடுதுறை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

➡️மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 15,880 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

News July 11, 2025

மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News July 11, 2025

மயிலாடுதுறை: நாளை உழவரை தேடி வேளாண் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள குளிச்சார் மற்றும் சோழம்பேட்டை கிராமங்களில் நாளை 11.7.2025 நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

image

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

News July 10, 2025

மயிலாடுதுறை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் என்ற<<>> செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020407>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

மயிலாடுதுறை:ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!