Mayiladuthurai

News April 18, 2025

தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், சங்கங்கள், உணவுக்கூடங்கள், கல்வி நிலையங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அபராதத்தைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 18, 2025

ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04364-290761 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 17, 2025

வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..

News April 17, 2025

மயிலாடுதுறை: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <>tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 17, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

image

12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

மயிலாடுதுறை சிறப்பு பேருந்து இயக்கம்

image

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக மயிலாடுதுறைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 16, 2025

நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

image

சீர்காழி வட்டம் காவிரிபூம்பட்டினம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையினை தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.

error: Content is protected !!