Mayiladuthurai

News August 6, 2025

இரவு ரோந்து பணி போலீசாரின் விபரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் குற்றச்சம்பவங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

News August 5, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

News August 5, 2025

மயிலாடுதுறை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

100 ஆண்டுகள் பழமையான கிணறு தூர்வாரும் பணி

image

திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள 100ஆண்டுகள் பழமையான கிணறு துர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

News August 5, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும் ரூ.1.5 லட்சத்தில் வேலை!

image

மயிலாடுதுறை இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

மயிலாடுதுறை: இப்படி ஒரு பெயர்களா?

image

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள இம்மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, செம்பனார்கோவில் – இந்திரபுரி, மணல்மேடு – நாகநாதபுரம் என அழைக்கப்பட்டது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 4, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்

image

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு மிஷன் வத்சல்யா திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவம் விளக்கக் குறிப்புகளை http://mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News July 11, 2025

நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்கள் – ஆட்சியர்

image

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெற்று பூர்த்தி செய்து செயற்செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் (அ) பதிவுத்தபால் மூலம் ஜூலை 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

மகளிா் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியா்

image

மயிலாடுதுறையில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 2ஆம் கட்டமாக 130 இடங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தனியாா் கடைகள், வணிக நிறுவனங்களில் போலியாக விற்கப்படும் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!