India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 25வது சன்னிதானத்தின் காலத்தில் கட்டப்பட்ட இலவச மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 27வது சன்னிதானம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், அங்கு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளதாக கூறப்படுவதால் தருமபுரம் ஆதீனம் பணிகளை தடுத்துநிறுத்த கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
பட்டாசு கடைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சில்லறை விற்பனை கடைகள் தனி கட்டிடத்தில் இயங்க வேண்டும்,பட்டாசு கடைக்கு அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய ஓட்டல் எண்ணெய் கடை இருக்கக்கூடாது, எலக்ட்ரிக்கல் டிரான்ஸ்பார்மர் அருகிலோ,மாடிப்படி அடியிலோ கடை இருக்கக்கூடாது, தீயணைப்பான் உரிய முறையில் புதுப்பித்திருக்க வேண்டும் என பட்டாசு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
மயிலாடுதுறை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்த வந்த மக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
மயிலாடுதுறையை சேர்ந்தவர் சிவகுரு (20) டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் எஸ்.புதூர் அருகே நேற்று (அக்.06) காரைக்கால் மெயின் ரோட்டில் சென்ற டாடா ஏஸ் வாகனம் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சிவகுரு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருநீலக்குடி போலீசார் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
மயிலாடுதுறை, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என பொதுமக்கள், தங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற (12.10.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற 582 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.