Mayiladuthurai

News October 9, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2025

மயிலாடுதுறை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மயிலாடுதுறை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 8, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
5.ஆரம்ப தேதி: 21.10.2025
6.கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE <<>>. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 8, 2025

மயிலாடுதுறை: மின்கம்பி அறுந்து விழுந்து பரிதாப பலி

image

மயிலாடுதுறை, திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் புதுத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, விவசாய தொழிலாளியான இவர் கால்நடைகளை பராமரித்து வருகிறார். இவருடைய மூன்று எருமை மாடுகளை அண்ணன் கோயில் பகுதியில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் திடீரென அறுந்து மாடுகளின் மீது விழுந்ததில், மூன்று மாடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன. இந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

News October 8, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம், இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News October 8, 2025

மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 8, 2025

மயிலாடுதுறை: மின்கம்பி அறுந்து விழந்து பரிதாப பலி

image

திருவெண்காடு அடுத்த பெருந்தோட்டம் புதுத்தெருவைச் சேர்ந்த சாந்தி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவருடைய 3 எருமை மாடுகள் அண்ணன்கோவில் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், 3 மாடுகளும் இறந்தன. இதுகுறித்து அப்பகுதி விஏஒ ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

News October 8, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆக்.,12-ம் தேதி (ஞாயிறு) 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில்-பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 582 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.7) இரவு 10 மணி முதல் நாளை(அக்.8) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2025

சாகும்வரை உண்ணாவிரதம்; தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 25வது சன்னிதானத்தின் காலத்தில் கட்டப்பட்ட இலவச மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 27வது சன்னிதானம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், அங்கு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளதாக கூறப்படுவதால் தருமபுரம் ஆதீனம் பணிகளை தடுத்துநிறுத்த கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!