India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.9) இரவு 10 மணி முதல் நாளை(அக்.10) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி நிலை, வசதிகள் மற்றும் நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் அறிந்தார். மேலும் மாணவர்களின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதலும் வழங்கினார்.
இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) 348 Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 20-35
4. சம்பளம்: ரூ.30,000
5. கடைசி தேதி: 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி உற்பத்தியை ஊக்குவித்து, உட்பொருளை மதிப்பூட்டும் வகையில், NMEO – எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் அரிசி தவிட்டு எண்ணெய் ஆலை அமைப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
பண்டிகை நேரம் என்பதால் பொதுமக்கள் கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மற்றும் விளம்பரங்களின் மூலம் இணையதளங்களில் பொருட்கள் வாங்குவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உண்மை தன்மை வாய்ந்த இணையதளங்களா என உறுதி செய்த பின்னரே பொருட்களை வாங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர் மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
சீர்காழி திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த தினேஷ் (34) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் சம்பந்தம் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரில் தினேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தினேஷிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தமிழ்ச்செல்வி நேற்று தீர்ப்பளித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகை திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 100-லிருந்து 150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகையும், ரூ.500 மருத்துவப் படியும் வழங்கப்படும். புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 17 வரை ஏற்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.