India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு மதுவேட்டையில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 516 வழக்குகள் பதியப்பட்டு அதில் தொடர்புடைய 524 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனம் 5 நான்கு சக்கர வாகனங்கள் 4378 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்றில் மிகவும் தொன்மையானதாகவும் பல வரலாற்று சிறப்புகளையும் கொண்டுள்ளது. இதற்கு சான்றாக செம்பியன்கண்டியூரில் 2006 ஆம் ஆண்டு கற்கோடாரி கிடைத்துள்ளது. அதில் சந்து சமவெளியுடன் தொடர்புடைய எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆய்வு செய்ததில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய பானைகளும், வட்டில்களும், தட்டுகளும் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தின் சேவை மைய கட்டடத்தில் நாளை (ஆக.,8) காலை 9.30 மணியளவில் “உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின்” கீழ் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு செம்பனார்கோயில் வேளாண்மை விரிவாக்க அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இதில் விவசாயிகளின் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள கால அவகாசம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா இன்று டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி சார்ந்த ரயில்வே பணிகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் பகல் நேரத்தில் மயிலாடுதுறை இருந்து சென்னை வரை சேர் கார், தரங்கம்பாடி அகல ரயில் பாதை திட்டம், சென்னையில் இருந்து நவகிரக ரயில், போன்றவை குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பள்ளியின் முன்னாள் மாணவரும், சீர்காழி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் வகுப்பறையை திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு அளித்தார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரில் மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு வழியாக மைசூர் செல்லும் ரயில் (16231) வரும் ஆக.,20ஆம் தேதி மட்டும் ஒரு மணிநேரம் தாமதமாக கடலூரில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக மைசூர் செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் (16847) ஆக.,20-ம் தேதி வரை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும். மற்ற நாட்களில் வழக்கம் போல் திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள்<
மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
Sorry, no posts matched your criteria.