India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி, மாதிரவேளூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் பா. பாலதண்டாயுதம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான நியமன ஆணையை பாமக தலைவர் ராமதாஸ் இன்று வழங்கி அவரது பணி சிறக்க வாழ்த்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளருக்கு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சீர்காழி தென்பாதியை சேர்ந்த கிருஷ்ணன்(58) புண்ணியமூர்த்தி(38) ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு புண்ணியமூர்த்தி கிருஷ்ணனை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த வழக்கு சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி புண்ணியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து சீர்காழி சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வெள்ளி தேர் செய்யப்பட்டு இன்று வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி தேரோட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்வதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக கிளியனூர், பெருஞ்சேரி, அகர வல்லம், கோவில், கிளியனூர், ஆத்தூர், எடக்குடி, சேத்தூர், பெரம்பூர், அரசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் (டிச.03) இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் பொதுமக்கள் பலரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் கணேசனை மயிலாடுதுறை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் சொத்துகளான 13 சவரன் நகையை போலீசார் குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரடியாக சென்று இன்று பெற்றுக்கொண்டார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோயம்புத்தூரில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் இன்று மயிலாடுதுறையில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ரயில் மயிலாடுதுறைக்கு வருகை தந்து அங்கிருந்து தாம்பரம் செல்லாது என கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில் பயணிகள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளும்படி ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக சென்னை செல்லும் வண்டி எண் 22676 சோழன் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில்கள் வழக்கம்போல் அதே நேரத்தில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மழை நீரை வடியவைத்த பிறகு பயிரின் வளா்ச்சி பருவத்தின்போது 1சதவீத யூரியா கரைசல், அதாவது ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவையும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டையும் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரியை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இடலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.