India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்திற்கு இலக்காக கடந்த ஆண்டு ரூ 68.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்களின் சிறிய முயற்சியினால் அரசு இலக்கை தாண்டி 85,35,458 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் வெள்ளி கார்த்திகை தீபத்தன்று காலை 8 மணிக்கு திருச்சியில் புறப்படும் ரயில், 11:40க்கு பண்ருட்டி, மதியம் 01:25க்கு திருவண்ணாமலை வழியாக 02:50க்கு வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்து- பாக்கியவதி என்பவர்களின் மகன் ஸ்ரீதர். கல்லூரி மாணவரான இவர் பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAI) மூலமாக தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற சீர்காழி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மின் கோட்டம், கடலங்குடி துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக, கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை (டிச.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலக்கசடுகளை சேகரிப்பதற்காக 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை எடுப்பதற்கு ரூ. 2000 விதம் நகராட்சி கருவூலத்தில் செலுத்தி வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என நகராட்சி அறிவித்துள்ளது.
தரங்கம்பட்டி வட்டம் திருவிளையாட்டம், கொங்கராயம்மண்டபம், திருவிடைகழி பகுதியில் உள்ள பெட்டிகடை, மளிகை கடையில் உணவு பாதுகாப்பு, சுகாதார துறை குழுவினர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். திருவிளையாட்டம் மளிகை கடையில் ஒன்றில் புகையிலை பொருட்கள் கைபற்றி அந்த கடைக்கு அதிகாரிகள் நேற்று அபராதம் விதித்து சீல் வைத்தனர்.
தரங்கம்பாடி அருகே பொறையார் ராஜூவ்புரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வேலை பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
வண்டி எண் 06404 கொண்ட மன்னார்குடி இருந்து மயிலாடுதுறை ரயில் மற்றும் மயிலாடுதுறை இருந்து மன்னார்குடி ரயில் டிசம்பர் 7 மற்றும் 22 ஆகிய இருநாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில் பயணிகள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை, மணக்குடி துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (டிச.7) பழைய ஸ்டேட் பேங்க் ரோடு, அரசு மருத்துவமனை, மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகாா் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், சேமங்கலம், ஆலவெளி, நத்தம், மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.