Mayiladuthurai

News December 12, 2024

மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

மயிலாடுதுறை பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் செல்லும் பொழுது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக செல்லும்படியும் கூறப்பட்டுள்ளது.

News December 11, 2024

பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு – எம்பி கோரிக்கை

image

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயிலை டெல்லியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.

News December 11, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மழை சேதம் தொடர்பான புகார்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364 – 222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

News December 11, 2024

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று (டிச.11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News December 10, 2024

மயிலாடுதுறை: கொலை வழக்கில் இளைஞர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த ரபீக் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் சொத்து தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது குற்றவாளியான முகமது பாசித் (19) என்பவர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

News December 10, 2024

மத்திய அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்பி கோரிக்கை 

image

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்கள் மற்றும் மாநகர பேருந்துகளை அனுமதிப்பது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். தொடர்ந்து மனுவினை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதி அளித்தார்.

News December 10, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!

News December 10, 2024

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று கலந்துரையாடி கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் , மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!