India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
மயிலாடுதுறை கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு 1943 இல் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இந்த மணிக்கூண்டு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியை எதிர்த்துப் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப்பட்டது. இதனை அப்துல் காதர் என்பவர் தனது சொந்தச் செலவில் கட்டி அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் உள்ளது போல் குறுஞ்செய்தி தங்களது கைப்பேசிக்கு வந்தால் குறிப்பிட்டுள்ள லிங்கை திறக்க வேண்டாம். அவ்வாறு திறந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்பொழுது அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு அழிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கோப்புகளையும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்; திருச்சியில் இருந்து தாம்பரம்வரை 5 நாட்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டும்; அந்தியோதயா ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை எம்.பி சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
மயிலாடுதுறை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜே.சி.ஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் மேடைப்பேச்சு பயிற்சி முகாம் நாளை சனிக்கிழமை சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் பகுதியில் பிரதான புதுமண்ணியாறு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதா என சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.