Mayiladuthurai

News March 23, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போதும், பொருட்களை வேண்டாம் என ரத்து செய்யும்போதும் OTP எனும் ஒருமுறை கடவுச்சொல்லை கேட்பார்கள். அவ்வாறு ஓடிபி பகிர்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டுவிடலாம் எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். Share பண்ணுங்க

News March 23, 2025

படகை இழந்த மீனவருக்கு ஆறுதல் கூறிய எம்.பி

image

சீர்காழி,புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது விசைப்படகு கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து சேதமடைந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே பழையாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி சுதா மீனவர் கோவிந்தனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

News March 23, 2025

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுர ரகசியம் தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

சீர்காழியில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை சீர்காழி விவேகானந்தா மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம்.

News March 23, 2025

கடற்கரைக்கு வருவோர் கடலில் குளிக்க வேண்டாம் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.

News March 23, 2025

தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி

image

சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.

News March 22, 2025

மயிலாடுதுறை காவல்துறையினர் அணிவகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம காவல்துறை சார்பில்

காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
மயிலாடுதுறை காவல்துறையினர்,

மயிலாடுதுறை நகரில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அணிவகுப்பு நடத்தினர்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் காவலர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை மக்களிடையே பாராட்டை பெற்றது.

News March 22, 2025

தேமுதிக மாவட்ட செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளராக பண்ணை சொ.பாலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பண்ணை பாலு மயிலாடுதுறை நகர செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

எம்பி சந்தித்த மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.

News March 21, 2025

சர்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

image

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்

error: Content is protected !!