Mayiladuthurai

News October 12, 2025

மயிலாடுதுறை: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் சம்பந்தமாக இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News October 12, 2025

மயிலாடுதுறை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 576 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டோர் மீது 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1,862 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். குட்கா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 13 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி நடவடிக்கை

image

மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் பகுதியில் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News October 12, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் போலியான தீபாவளி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள், போலி ஷாப்பிங் தளங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எனவே அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே வாங்கவும், OTP அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான இணைப்புகளை <>cybercrime <<>>என்ற தளத்தில் புகாரளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

News October 12, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.11) இரவு 10 மணி முதல் நாளை(அக்.12) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

மயிலாடுதுறையில் காவல் அலுவலர்களுக்கு கவாத்து பயிற்சி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு வாராந்திர சிறப்பு கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சிக்கு, எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்தார். வழக்கமாக அளிக்கப்படும் கவாத்து பயிற்சி உடன் காவல்துறையின் நெறிமுறைகள் கண்ணியம் ஒழுக்கம் கோட்பாடு குறித்து விளக்கமளித்தனர்.

News October 11, 2025

மயிலாடுதுறை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே CLICK செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் LIKE செய்து SHARE பண்ணுங்க.

News October 11, 2025

மயிலாடுதுறை: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. கடைசி தேதி: 09.11.2025
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
7. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!