India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (42) என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக வழக்குப் பதியப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை நேற்று (ஜன.28) கமுதிக்கு சென்று கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி, குன்னம் மாதிரிமங்கலம், மேக்கரிமங்கலம், திருவாலங்காடு, பாலையூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களின் மின் பாதைகளில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கடலங்குடி, சோழம்பேட்டை, மாந்தை, ஸ்ரீகண்டபுரம், திருமங்கலம் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாளுக்கு 18-ம் ஆண்டு தை அமாவாசை பால் குடம் அபிஷேக விழா 02.01.2025 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு திருக்கடவூர் ஆனைகுளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ எதிர்காளிஸ்வரர் ஆலயததிலிருந்து பால்குடம் புறப்பட்டு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாள் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (42) என்பவர் கொள்ளிடம் பகுதியில் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் எஸ்.பி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி ஆனைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் செல்வகுமாரை நேற்று கமுதியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலத்தில் ஜக்ஜித் சிங் டல்லேவால் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று (ஜன.26) மயிலாடுதுறையில் டிராக்டர் பேரணி நடைபெற்ற நிலையில், டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள் பங்கேற்ற நிலையில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்று பதக்கம் வென்றுள்ள மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜ்கமல், முதல்வர் ராமலிங்கம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் கொடிநாள் நிதி வசூலில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாமிடம் பெற்றமைக்காக மாண்புமிகு ஆளுநர் திரு என்.ரவி அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்களுக்கு சூழற்கோப்பை வழங்கினார்கள். சூழற்கோப்பை பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சீர்காழி முழு நேர கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் வெங்கடேசனை நூலக ஆணைக் குழு துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.