India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட , மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே<
உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள இலவச வைஃபை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் தங்களது தகவல்கள் மற்றொரு நபரால் கண்காணிக்கப்பட்டு திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.12) இரவு 10 மணி முதல் நாளை(அக்.13) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5. கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
சீர்காழியில் பட்டாசு கடை உரிமையாளர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிஎஸ்பி அண்ணாதுரை தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தீயணைப்பு நிலைய அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் பட்டாசு கடைகளில் கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் சம்பந்தமாக இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.