India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் பாரம்பரியமாக செய்யப்படும் தைக்கால் பிரம்பு உலகப்புகழ்பெற்ற கலைப்பெருளாகும். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல தலைமுறைகளாக பிரம்பைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்குக்கி வருகின்றனர். இதில் நாற்காலிகள், ஊஞ்சல்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த கலைநயத்தை போற்றும் வகையில் இதற்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது. நம்ம ஊரு பெருமைகளை ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், காசோலையை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து பயனாளி ஒருவருக்கு ரூபாய் 8650 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅எழுத்தாளர் கல்கி
✅நடிகர் தியாகராஜ பாகவதர்
✅நடிகர் டி.ராஜேந்தர்
✅குன்றக்குடி அடிகள்
✅பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்
✅நரம்பியல் மருத்துவர் பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி
✅நடிகை பிரியா பவானி சங்கர்
✅பாடகர் மாணிக்க விநாயகம்
✅நடிகர் ஜெயபிரகாஷ்
நம்ம மயிலாடுதுறைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை சாவடி தோப்பு தெருவை சேர்ந்தவர் சூர்யா திருவிடைமருதூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் தூக்கு போட்டு உயிரிழந்தார் மயிலாடுதுறை போலீசார் உடலை கை பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்காக நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள்குறி வகையிலான தேர்வு வருகிற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வினை 843 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.