India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் நாளை (மார்ச்.29) காலை 9 மணி – 3 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் பயோடேட்டா, கல்வி சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி எம். சுந்தரரேசன் மேற்பார்வையில், அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் அபிராமி, ஜெயா மற்றும் போலீஸார் மார்ச் 12 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை 12 நாள்களில் மேற்கொண்ட தீவிர சோதனையில் மது மற்றும் சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். நண்டலார் சோதனைச் சாவடியில் 22 வழக்குகள், நல்லாடை சோதனைச்சாவடியில் 38 வழக்குகள் பதிவாகி உள்ளன.
Whatsapp, Facebook, Instagram போன்ற சமூக வளையதளங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போதோ சாட்டிங் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். படங்கள் மற்றும் குரல் பதிவுகளை பதிவு செய்து அவற்றை வேறு வகையில் உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். சந்தேகப்படும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் ஹெல்ப் லைன் நம்பர் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும் காவல்துறை கேட்டுக்கொண்டது. Share செய்யுங்கள்
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று நேரில் சந்தித்து மயிலாடுதுறை தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரையிலான இன்டர்சிட்டி ரயிலை வாரத்தில் எல்லா நாளும் இயக்க வேண்டும், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நடப்பு பருவத்தில் பருத்தி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய வருகிற 31ஆம் தேதி கடைசி என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாதானம் புத்தூர் சீர்காழி மேலையூர் தில்லையாடி செம்பனார்கோயில் உள்ளிட்ட 9 தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பருத்தி பயிருக்கு காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.18,723 ஆகும்.அதில் 2 சதவீத பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ374.46 ஆகும்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளி பிரபுவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி இன்று தீர்ப்பளித்துள்ளார். Share It
Sorry, no posts matched your criteria.