India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள FIELD MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 -ரூ.25,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் முதல் அச்சகம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தஞ்சை மண்டலத்திலும், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில்தான் முதல் அச்சகம் தொடங்கப்பட்டது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்கு பாதிரியார் என்ற ஜெர்மானியரால் தொடங்கப்பட்ட இந்த அச்சகம் ‘டி நோபிலி அச்சகம்’ என்ற பெயரில் இன்றளவுன் செயல்படுகிறது. இதை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்கள்.
மயிலாடுதுறையில் பொறையார் மற்றும் சீர்காழி செயற்பொறியாளர் அலுவலகங்களில், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உட்பட அனைத்து மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கூடம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பொறையார் மற்றும் சீர்காழி செயற்பொறியாளர் அலுவலகங்களில், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உட்பட அனைத்து மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கூடம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். கூரை வீடுகளில் வசிப்பவர்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். விறகு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை ஏப்ரல் 6
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த இரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்.16104), ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை செல்வதால் மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் 02 -ம் தேதி முதல் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6, 2025 மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் நிபுணர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.