India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த 3 1/2 வயது பெண் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று உணவு இடைவெளியின் போது கை கழுவ சென்ற போது 17 வயது சிறுவன் அங்கன்வாடிக்கு பின்புறம் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிறுமி அலறவே செங்கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளான். சிறுமி மருத்துவமனையில் அனுமதி. கொள்ளிடம் போலீசார் சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற பிப்.27ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் வட்டாரம், காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் பியூலா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சமையலர் சகாயமேரி என்பவரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் முன்னிலையில் கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு புதிதாக கல்வெட்டு திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டார். மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர், கிளை பொறுப்பாளர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். மயிலாடுதுறையில் மட்டும் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
மகா சிவராத்திரி விழா வரும் பிப்.26ஆம் தேதி வருவதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை 5 மணி முதல் தொடங்கி நடைபெறும் விழாவானது மகா சிவராத்திரி அன்று முடிவடைகிறது. இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் ரத்ததான முகாம் மணல்மேடு அரசு மருத்துவமனையில் நாளை நடைபெற உள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செயலாளர் நெடுஞ்செழியன், குத்தாலம் முன்னாள் நிர்வாகி அய்யா.ராமகிருஷ்ணன், நகர அணி நிர்வாகி சிவலிங்கம், 1ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜெயந்தி ரமேஷ் உள்ளிட்டோரை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி வைப்பதாக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.