India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் <
மயிலாடுதுறையில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமை செயளர் நேற்று உத்தரவிட்டிருந்தார். மேலும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டிருந்தார்.
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறத்துள்ளார். புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்றரை வயது குழந்தை பாலியல் தொல்லை குறித்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சையாக பேசிருந்தார். இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில், மூன்றரை வயது குழந்தை பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில், முதலில் குழந்தை சிறுவன் மீது எச்சில் துப்பியதே பாலியல் தொல்லைக்கு காரணம் என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பேசியிருந்தார். இந்நிலையில் அவரின் பேச்சுக்கு, பாதிக்கப்பட்டோர் மீதே பழிபோட்டு விவரங்களை வெளியிடுவதன் தொடர்ச்சியே ஆட்சியரின் பேச்சுக்கு காரணம் என அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <
ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகளை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார்.
முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டையை வான்நோக்கி வீசுவார்கள். காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டு ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர். அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்பப்படுகிறது.
சீர்காழி அருகே அங்கன்வாடி மையத்தில் உணவு இடைவெளியின் போது 3 1/2 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர் வசந்தி மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் சுந்தரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்ட விரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக தீவிர சோதனை மற்றும் வாகன தணிக்கை நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் மது குற்ற வழக்குகளில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதுமாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை(பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.
Sorry, no posts matched your criteria.