Mayiladuthurai

News April 7, 2025

JUST IN: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 7, 2025

மயிலாடுதுறை: அங்கன்வாடியில் வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்(5), குறு அங்கன்வாடி பணியாளர்(1), அங்கன்வாடி உதவியாளர்(4), பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 7, 2025

மயிலாடுதுறை: போராட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டம் ஏப்.8ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போரட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

News April 6, 2025

மயிலாடுதுறை: அனைத்தும் அருளும் அமிர்தகடேஸ்வரர்

image

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 6, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், `இணையதளங்களில் உங்களுக்கு பரிசு பொருள் கிடைத்திருக்கிறது, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என போலியாக வரும் மோசடிக்காரர்கள் சித்தரிக்கும் பரிசு வலையில்` பொதுமக்கள் விழ வேண்டாமென கூறியுள்ளனர். மேலும், சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

News April 6, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நற்செய்தி 

image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆதார் எண், பேங்க் புக் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் இணைந்து சீர்காழி (9080427055), செம்பனார்கோவில் (9943917494),  மாணிக்கப்பங்கு (9843448803) ஆகிய பகுதியை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

News April 6, 2025

நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

image

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

News April 5, 2025

மயிலாடுதுறை அருகே அதிசய கிணறு

image

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலின் கிணறு கடலுக்கு அருகில் உள்ளது. கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்தும் கடல் நீர் அருகில் சூழ்ந்த பிறகும் நீரின் சுவை கொஞ்சமும் மாறவில்லை. தரங்கை மக்கள் இன்றும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்த பிறகு இக்கிணற்றில் மீண்டும் குளிக்க வருகிறார்கள். இது சுவையான நல்ல நீராக இருப்பதால் ஆச்சரியப்பட்டு செல்கிறார்கள்.

News April 5, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு நற்செய்தி  

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்திலும், 04364-299790 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.

News April 5, 2025

மயிலாடுதுறையில் வேலை: ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் நோ்முக தேர்வுக்கு ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

error: Content is protected !!