Mayiladuthurai

News February 9, 2025

மயிலாடுதுறையின் மூன்றாவது புத்தகத் திருவிழா 2025

image

மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா 2025 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறுகிறது. அந்நிகழ்வில் இன்று பாவலர் அறிவுமதி தமிழைப் போற்றிய சங்க மன்னர்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியின் மாணவர், மாணவிகள் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கியதோடு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி சான்றிதழ்கள் பெற்றனர்.

News February 9, 2025

நாளை சீர்காழி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

image

சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள பெருந்தோட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசரின் பேரனும், பிரபல இந்திய கிரிக்கெட் வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரன் நாளை பெருந்தோட்டம் வருகை தர உள்ளார். SHARE IT!

News February 9, 2025

வைத்தீஸ்வரன் கோயில் எஸ்.எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு

image

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் பாலசுந்தரம்   (55) சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 தினங்களாக நண்டலாறு சோதனை சாவடி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று பணியின்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

News February 8, 2025

மயிலாடுதுறை ரயில் இங்கு நின்று செல்லும்

image

ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளபடி, ரயில் எண் 16847/16848 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், ஆலக்குடி நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும். இந்த நிறுத்தம் சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் 2025 ஆம் ஆண்டு மே 10 வரை அமலில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News February 8, 2025

மயிலாடுதுறையில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், ஸ்ரீ ஜெயின் பைனான்ஸ் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த்  கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாமானது நாளை (பிப்.9) ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது, மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசம்.

News February 8, 2025

மயிலாடுதுறை: பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை கலெக்டர் ஏ.பி.மகாபாரதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதம மந்திரியின் பயிா்காப்பீட்டுத் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிா்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிா்த்திட விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9790004303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

மீனவர்களுக்காக மயிலாடுதுறை எம்.பி ஆர்ப்பாட்டம்

image

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இந்த சம்பவம் ஆனது தொடர்கதையாகி வருவதால் அதனை கண்டிக்கும் வகையில் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை அதனை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்தும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் மயிலாடுதுறை எம்.பி. வழக்கறிஞர் சுதா உள்ளார்.

News February 7, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் உறுதிமொழி வாசிக்க பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News February 7, 2025

ரயிலில் சிக்கி கால்களை இழந்த வங்கி ஊழியர்

image

தஞ்சையை சேர்ந்த அறிவழகன், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு செல்ல மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்த அவர், பக்கத்து நடைமேடைக்கு செல்ல சரக்கு ரயிலின் அடியில் புகுந்த சென்றுள்ளார். அப்போது ரயில் புறப்படவே அவரது இரு கால்களும் துண்டாக்கின. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2025

கபாடி போட்டியை தொடங்கி வைத்த மயிலாடுதுறை ஆட்சியர்

image

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபாடி போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

error: Content is protected !!