India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் மார்ச் 11 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள பொதுமக்கள் திருமண உதவித்தொகை கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவி வேண்டி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் 25 புதிய சிற்றுந்து வழித்தடங்களுக்கு அனுமதி கோர விருப்பம் உள்ளவர்கள், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் படிவத்தை பெற்று கொண்டு உரிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு 2024 கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரியில் 06.03.2025 முதல் 09.03.2025 வரை 8 அமர்வுகளில் 559 தேர்வர்கள் CBT முறையில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை அமர்வானது 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை அமர்வானது 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் வரும் மார்ச்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில், தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார்.தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக இக்கோயில் ஐதீகம்.
பொதுமக்கள் வாடிக்கையாளர் சேவை மைய எண்களை தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் உள்ளன. அதன் மூலம் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற புகார்களை 1930 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.