Mayiladuthurai

News February 14, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்கள் தங்களுடைய பண பரிமாற்றத்திற்கு உதவும் யு.பி.ஐ கடவுச்சொல் மற்றும் ஏ.டி.எம் கடவுச்சொல்லை தங்களுக்கு அருகில் நிற்கும் நபர்கள் முன்னிலையில் உள்ளிடவோ அல்லது தங்களின் ஏ.டி.எம் அட்டையை யாரிடமும் பகிரவோ வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கில் இருக்கும் பணம் திருடப்படலாம் என எச்சரித்துள்ளது.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 <>காலியிடங்கள்<<>> நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

சீர்காழி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி தோப்பு தெருவை சேர்ந்தவர் மணி (70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் நேற்று தனது ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தபோது திருவாலி ஏரியில் கை கால்கள் கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராமல் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை நகர, மணக்குடி, நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களிலும் மற்றும் மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் இன்று (பிப்.13) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையங்கள் மற்றும் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

ஆட்டுக் கொட்டகையில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு

image

கொள்ளிடம், தைக்கால் கிராமத்தில் ராஜ்குமார் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுக்கொட்டகையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன் ஆட்டுக் கொட்டகைக்குள் ஒளிந்திருந்த ஐந்தடி நீளம் உள்ள கோதுமை நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

News February 12, 2025

102 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்

image

மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று 102 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் உடன் பங்கேற்றனர்.

News February 12, 2025

மீனவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கிய அமைச்சர்

image

சந்திரபாடி கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மீனவ பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை இன்று வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News February 12, 2025

மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. வாராந்திர குறை தீர்ப்பு நாளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டார். மேற்படி மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News February 12, 2025

உரிமம் இன்றி செயல்பட்ட 6 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’

image

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு குற்றங்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 6 நாட்கள் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில், உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 4 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!