India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
மயிலாடுதுறையில் குரூப் 1 மற்றும் யுஎஸ்ஆர்பி, எஸ்.ஐ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏப்.15ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9499055904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 முக்கிய கோவில்கள்
1. வைத்தீஸ்வரன் கோயில்
2. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
3. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
4. திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
5. சுவேதாரண்யேசுவரர் கோயில்
6. மயூரநாதசுவாமி கோயில்
7. பரிமளா ரங்கநாதர் கோவில்
8. வள்ளலார் கோயில் (திரு இந்தலூர் சிவன் கோயில்)
9. புனுகீஸ்வரர் கோயில்
10. திருமணஞ்சேரி கோயில், ஷேர் பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வரை குறைந்த வட்டியில் வழங்கப்படும் நிதியுதவி உதவியினை பெறலாம். மேலும் விபரங்களுக்கு https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அதோடு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5-வது தளத்தில் உள்ள துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) நேரில் சந்தித்தும் தெளிவான தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
மயிலாடுதுறையில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.