India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
போலியான இணையதள பக்கத்தில் தங்களது சுயவிபரங்களை பதிவிட்டால் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் திருடப்படலாம், மேலும் உங்கள் கணக்கில் உள்ள பணமும் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பொறுப்பு வழங்கப்பட்டு தற்போது பொறுப்பேற்றுள்ளார். கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி குறித்து அவர் கருத்து தெரிவித்தது சர்ச்சையானதால் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.
மயிலாடுதுறை, பெரம்பூர் காவல் சரகம் கிளியனூரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி அனுமதியின்றி சாராயம் வைத்து விற்பனை செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வி தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் செந்தமிழ்ச்செல்வியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தார். குரூப் குழு மற்றும் குரூப் குழு தேர்வுக்கான விளம்பர அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகள் மார்ச்-17 தொடங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை இணைய பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்பின் தெரியாத நபர்களிடம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் நவீன முறையில் இது போன்ற பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 4 முதல் 27ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம், திருச்சி இடையே கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு வழியாக 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40க்கு திருச்சி வந்தடையும். Share பண்ணுங்க
மயிலாடுதுறை,பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வருகிற 31ஆம் தேதிக்குள் மின்னணு அடையாள கைரேகை பதிவை மின்னணு கே.ஒய்.சி மூலம் மேற்கொள்ள வேண்டும். இன்று(மார்ச் 14), நாளை(15) மற்றும் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் மின்னணு அடையாளப் பதிவை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க
இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் -மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் மார்ச் 15ஆம் தேதி கோவையில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜனசதாப்தி விரைவு ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கிய சாலையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் இரவு 8-மணியளவில் குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கிரீம் எடுக்க முற்பட்டபோது எதிர்பாராதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சிறுமியை தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். இது குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.