Mayiladuthurai

News April 17, 2025

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 17, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

image

12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

மயிலாடுதுறை சிறப்பு பேருந்து இயக்கம்

image

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக மயிலாடுதுறைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 16, 2025

நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

image

சீர்காழி வட்டம் காவிரிபூம்பட்டினம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையினை தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.

News April 16, 2025

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய உத்திகள் குறித்த விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

News April 16, 2025

மயிலாடுதுறை: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

News April 16, 2025

அரசு மதுபானக்கடை மதுபாட்டியில் இறந்த நிலையில் பல்லி

image

புத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் மது வாங்கிய போது, பாட்டிலின் உள்ளே பல்லி இறந்து கிடந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது நிறுவனத்தின் குறைபாடு எங்களுக்கு சம்மந்தமில்லை எனக் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 16, 2025

தைக்கால்: பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து

image

தைக்கால் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட தனியார் பேருந்து நின்றபோது கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி சென்ற இருசக்கர வாகனம் பேருந்தின் பின் பகுதியில் வேகமாக மோதியது. பேருந்து கண்ணாடியில் இருசக்கர வாகன ஓட்டியவர் தலை மோதி காயமடைந்தார். உயிர்சேதமின்றி  இருசக்கர வாகன ஓட்டி காயத்துடன் தப்பினார். கொள்ளிடம் காவல் நிலையத்திற்க்கு கொடுக்கப்பட்டு விசாரணை  மேற்கொள்ளப்பட்டது.

News April 16, 2025

மயிலாடுதுறையில் சத்துணவு மையத்தில் வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவா்கள் ஏப்.29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி ஆட்சியா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

error: Content is protected !!