Mayiladuthurai

News March 30, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 589 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,344 மாணவர்களும் 6,281 மாணவிகளும் என மொத்தம் 12,625 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 52 தேர்வு மையங்களில் நடைபெற்ற பொது தேர்வில் நேற்று 399 மாணவர்களும் 190 மாணவிகள் என முத்தம் 589 தேர்வு எழுத வரவில்லை. 12,036 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 30, 2025

மயிலாடுதுறையில் நடப்பாண்டில் 33 ரவுடிகள் கைது 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் தற்போது வரை ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 33 ரவுடிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த 5 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

நாளை வருகிறார் தமிழ்நாடு கவர்னர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் கவிச்சக்கரவர்த்தி அவர்களின் கம்பர் கோட்டம் கம்பர்மேடு கம்பர் மணி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த நிலையில் நாளை மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  வருகை தந்து பார்வையிட உள்ளார்கள்.

News March 29, 2025

வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கிய ஆட்சியர்

image

சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 29, 2025

மங்கு, பொங்கு, மரண சனியில் இருந்து விடுபட ?

image

சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..

News March 29, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கிராம சபா கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கிராம சபை கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம். ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News March 29, 2025

மயிலையில் வேலைவாய்ப்பு முகாம் 

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பணி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளார். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.

News March 28, 2025

மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

image

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

News March 28, 2025

ரூ. 2 1/2 லட்சம் மதிப்பில் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஆணையர் வழங்கினார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்களின் நிலவரம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!