India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த கதிரவன் (25) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
மயிலாடுதுறை கூறை நாட்டில் உள்ள தனியார் திருமண மஹாலில் மயிலாடுதுறை தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் அமமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொன். பாரிவள்ளல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் வருகிற 25.04.2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04364299790/949055904 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
மயிலாதுறை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 5 அங்கன்வாடி பணியாளர், 1 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 4 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இந்த லிங்க்கை <
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே16ஆம் தேதி ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களுடைய குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிற 29ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம் பகுதியில் புகழ்பெற்ற புலீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 108 அம்மன் கோயில்களில் 18வது சத்தி ஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள புலீஸ்வரி அம்மன் புலியின் மீது அமர்ந்துள்ள உருவப்படத்தை அஞ்சல் தலை மூலம் வெளியிட அஞ்சல் துறைக்கு கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு விண்ணப்பித்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை மூலம் புலீஸ்வரி அம்மன் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
▶காவல் நிலையம்,மயிலாடுதுறை – 04364222450, ▶காவல் நிலையம்,சீர்காழி – 04364270100, ▶காவல் நிலையம்,பூம்புகார் – 04364260442, ▶காவல் நிலையம்,குத்தாலம் – 04364234100, ▶காவல் நிலையம்,கொள்ளிடம் – 8300059544, ▶காவல் நிலையம்,வைத்தீஸ்வரன்கோவில் – 04364279390, ▶காவல் நிலையம்,புதுபட்டினம் – 04364268452, ▶காவல் நிலையம்,பாழையார்- 4352469100, ▶காவல் நிலையம்,திருவெண்காடு – 04364256434 ஷேர் பண்ணுங்க .
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
மயிலாடுதுறையில உள்ள தனியார் நிறுவனத்தில் FIELD MANAGER பணிக்கான 42 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.