India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் மார்ச் 11 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள பொதுமக்கள் திருமண உதவித்தொகை கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவி வேண்டி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் 25 புதிய சிற்றுந்து வழித்தடங்களுக்கு அனுமதி கோர விருப்பம் உள்ளவர்கள், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் படிவத்தை பெற்று கொண்டு உரிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு 2024 கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரியில் 06.03.2025 முதல் 09.03.2025 வரை 8 அமர்வுகளில் 559 தேர்வர்கள் CBT முறையில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை அமர்வானது 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை அமர்வானது 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் வரும் மார்ச்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில், தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார்.தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக இக்கோயில் ஐதீகம்.
பொதுமக்கள் வாடிக்கையாளர் சேவை மைய எண்களை தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் உள்ளன. அதன் மூலம் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற புகார்களை 1930 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை அணுகலாம்.
சீா்காழி அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க 4 1/2 வயது பெண் குழந்தையுடன் பெற்றோா் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்த குழந்தையை அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியின் தாய் மாமன் தமிழ்வாணன்(43) என்பவா் தனியாக அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். பெற்றோா் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செல்வி விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழ்வாணனை கைது செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.