India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வருகின்ற மார்ச் 26 அன்று காலை 9 மணி முதல் மார்ச் 27 அன்று காலை 9 மணி வரை தமிழக அரசின் திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் முகாம் நடைபெறும் எனவும் இதனை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 465 மனுக்கள் தரப்பட்டு பரிசீலனை நடைபெற்றது.
செம்பனார்கோயில் கஞ்சா நகரம் பகுதியை சேர்ந்தவர் அகோர முருகன் (54) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு அருந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செம்பனார்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது என்று சொல்லி, QR Code ஐ ஸ்கேன் செய்ய சொன்னால் செய்ய வேண்டாம் எனவும், இந்த வழியில் நூதனமாக மோசடிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற ஏதேனும் புகார்கள் இருந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சுமார் 1 கிலோ அளவிலான கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வீரமணி (27), அபிஷேக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போதும், பொருட்களை வேண்டாம் என ரத்து செய்யும்போதும் OTP எனும் ஒருமுறை கடவுச்சொல்லை கேட்பார்கள். அவ்வாறு ஓடிபி பகிர்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டுவிடலாம் எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். Share பண்ணுங்க
சீர்காழி,புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது விசைப்படகு கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து சேதமடைந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே பழையாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி சுதா மீனவர் கோவிந்தனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை சீர்காழி விவேகானந்தா மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.