India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 53 தேர்வு மையங்களில் நேற்று தொடங்கியது.இதில், 5915 மாணவர்கள், 6063 மாணவிகள் என மொத்தம் 11,978 மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 186 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 70 பறக்கும்படையினர், 56 நிலையான படைகள், 14 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மயிலாடுதுறை மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை(மார்.13) தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாடுகளை எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பழையகூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணகி. இவரது வீட்டிற்கு மாறுவேடத்தில் வந்த மர்ம நபர், கண்ணகீன் 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தை குறி சொல்வது போல நூதன முறையில் திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி, மணல்மேடு பகுதிகளில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மத்திய ஆயுத காவல் படையான எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) இணைந்து கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.