Mayiladuthurai

News April 4, 2025

மயிலாடுதுறைக்கு புதியஇரயில் – பயணிகள் மகிழ்ச்சி

image

இராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை ஏப்ரல் 6
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த இரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்.16104), ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை செல்வதால் மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 4, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் 02 -ம் தேதி முதல் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர்.

News April 4, 2025

என் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6, 2025 மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் நிபுணர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.

News April 3, 2025

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் FIELD MANAGER பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 3, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 2, 2025

வைத்தீஸ்வரர் ஆலயம் சென்றால் முன்னேற்றம் உண்டு

image

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.

News April 2, 2025

மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

image

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.

News April 2, 2025

தங்க சங்கிலி பறித்தவர்கள் கைது

image

கொள்ளிடம் மணியிருப்பு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கலியமூர்த்தி என்பவரின் தங்க சங்கிலியை நேற்று முன்தினம் இளைஞர்கள் வழிமறித்து பறித்து சென்றனர். புகாரின்பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அளக்குடியை சேர்ந்த தமிழ்மாறன், பார்த்திபன், கண்ணதாசன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.

News April 2, 2025

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு 

image

தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 16 மாவட்ட இளைஞர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர் என ஆன்லைனில் ஏப்ரல் 10 வரை www.joinindianarmy.nic.in இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!