Mayiladuthurai

News May 11, 2024

மயிலாடுதுறை: முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திர சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் எம்.புனிதவதி என்ற மாணவி 493 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் இடையே மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News May 11, 2024

மயிலாடுதுறை: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

மயிலாடுதுறை: 497 மதிப்பெண்கள்… மாணவி சாதனை

image

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தருமை ஆதினம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் இப்பள்ளியில் பயிலும் சங்கரி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News May 10, 2024

மயிலாடுதுறை 30ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.27% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.67 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

10th RESULT: மயிலாடுதுறையில் 90.48% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.30% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

மயிலாடுதுறை: மாணவரை பாராட்டிய ஆட்சியர்

image

சீர்காழி வட்டம் நாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சூரிய கிருஷ்ணன் என்ற மாணவன் +2 பொதுதேர்வில் வணிகவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி மாணவன் சூரிய கிருஷ்ணன் மற்றும் அவரது வணிகவியல் முதுகலை ஆசிரியை ஜெயா ஆகியோரை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

News May 9, 2024

சீர்காழி அருகே நாளை ஆதார் சிறப்பு முகாம்

image

சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நாளை (மே.10) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. திருவாலி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிதாக ஆதார் அட்டை மற்றும் பழைய ஆதார் அட்டையில் பெயர், வயது மற்றும் முகவரி திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

News May 9, 2024

மயிலாடுதுறை: மழைப்பொழிவு விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றைய மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொல்லிடம் பகுதியில் 7 செண்டி மீட்டர் அளவு மழைப்பொழிவு பதிவானது. கோடையில் வெப்பம் அதிகரித்திருப்பினும், தமிழகத்தில் ஆங்காங்கே மழைப்பொழிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!