Mayiladuthurai

News April 11, 2024

மயிலாடுதுறை: உலவும் சிறுத்தை… மக்களே உஷார்!

image

மயிலாடுதுறை நகரில் மீண்டும் சிறுத்தை வந்ததாக கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும், காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

News April 10, 2024

மயிலாடுதுறையில் காவலர்களுக்கு ஆலோசனை

image

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் அன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

News April 10, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (11-04-2024) டெல்டா மாவட்டங்களில் (திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை குறித்து தகவல் இல்லை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

News April 10, 2024

மயிலாடுதுறையில் தீவிர பிரச்சாரம்

image

மயிலாடுதுறை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்ற வேட்பாளருக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாம்பழம் சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

News April 10, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல் தேர்தல் பார்வைையாளர் ஜன்மே ஜெயாகைலாஷ், மாவட்ட எஸ்பி மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

News April 10, 2024

சீர்காழி அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

image

சீர்காழி, கீழமாத்தூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்ந கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதிகளும் சரிவர கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 9, 2024

மயிலாடுதுறையில் வனத்துறை தகவல்

image

மயிலாடுதுறையில் வனத்துறை சார்பில் இன்று சிறுத்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பூர் அருகே நண்டலாற்றின் அருகில்
சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பதனை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

மயிலாடுதுறை: காவலர்களுக்கு நீர்மோர் வழங்கல்

image

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் சார்பில் நாகேஸ்வரமுடையார் கோவில் சந்திப்பு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து அலுவல் பார்த்த போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையினருக்கு வெயிலின் தாகத்தில் இருந்து காத்துக் கொள்ள சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார்.

News April 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் , உணவு நிறுவனங்கள் , மோட்டார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வருகின்ற ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!