Mayiladuthurai

News April 17, 2024

மயிலாடுதுறை: எடுத்துரைத்த தேர்தல் வாக்குறுதிகள்

image

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொள்ளிடம் சுற்று வட்டார கிராமங்களில் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 17, 2024

மயிலாடுதுறை அருகே போலீஸ் குவிப்பு 

image

பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் காவல்சரகத்தில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் காவல் ஆளினர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்று வடபாதி பகுதியிலிருந்து துவங்கி மாதானம் முத்து மாரியம்மன் கோவில் அருகே பேரணியை நிறைவு செய்தனர்.

News April 17, 2024

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

image

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்

News April 17, 2024

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

image

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்

News April 17, 2024

மயிலாடுதுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் , பொதுமக்கள் இத்தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.

News April 16, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுகின்ற பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்க ஏதுவாக படிவம் 12 பிற மாவட்டங்களுக்கு 1437 வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. இதில் 1290 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் மீதமுள்ள வாக்குகள் விரைந்து பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

News April 16, 2024

மயிலாடுதுறை: காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்

image

மயிலாடுதுறையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவலர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை பார்வையிட காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

News April 16, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் முன்பு இருந்ததை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 16, 2024

மயிலாடுதுறையில் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம்

image

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் ஊராட்சி குளத்தூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பாண்டவர்கள் சமேத ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மகாபாரத கதை பாடப்பட உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வரும் 22 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது

error: Content is protected !!