India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் சென்று மீண்டும் மயிலாடுதுறை வரும் ரயில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சேலத்திலிருந்து புறப்படாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கரூரில் புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
I.N.D.I.A கூட்டணி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள வழக்கறிஞர் சுதா அவர்கள் நேற்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களை சென்னை மமக தலைமையகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். எம்பி R.சுதாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் பேராசிரியர் ஜவாஹிருல்லா. நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா இன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து சால்வை அணிவித்து எம்பிக்கு மரியாதை செலுத்திய நிலையில் சிறப்பாக பணியாற்றும் படி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று விசிக கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது விசிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 29ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போதைய(2024-2025) கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் தமிழ் வழியில் ஒரு மாணவரும் , ஆங்கில வழியில் ஒரு மாணவரும் என மொத்தமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது போன்ற பள்ளிகளை அரசு மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை திரு இந்தளூர் ஊராட்சியில் உள்ள பல்லவராயன் பேட்டையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவ செல்வங்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.