India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்பர்க் கோட்டை உள்ளது. தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஓசோன் ஆற்று வீசும். மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது. இந்த கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகமாகி வருகிறது.
மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே மற்றும் காந்திஜி சாலையில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று திருச்சி கோட்ட மேலாளரை நேரில் சந்தித்தனர். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ரயிலை மயிலாடுதுறையில் உள்ள பயணிகளும் பயன்படுத்துவதற்கு வசதியாக ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் இந்திரா நகரில் மோட்டார் டேங்க் பழுதடைந்ததால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஊழியர்களைக் கொண்டு மோட்டார் டேங்க் இன்று பழுது நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மயிலாடுதுறையில் உள்ள ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் துவங்கி வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோர் இதில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி இந்நிலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் நேற்று மாலையில் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியின் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, மாவட்ட காவல் எஸ்பி மீனா உத்தரவின்படி இன்று மயிலாடுதுறையில் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு வெயிலின் தாக்கத்தினால், அவர்களின் நலன் கருதி பழச்சாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீர்மோர் வழங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார் சீனிவாசன் தனிப்பிரிவு போலீசார் மூர்த்தி காவல் ஆளிநர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Sorry, no posts matched your criteria.