Mayiladuthurai

News May 7, 2024

மயிலாடுதுறை அருகே விற்பனை தீவிரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆங்காங்கே நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் நுங்கு விற்பனை செய்யும் இடங்களில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் வெயிலில் தாக்கத்திலிருந்து அதிக அளவில் நுங்கு வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 7, 2024

மயிலாடுதுறை அருகே அச்சுறுத்தும் மின்கம்பிகள் 

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் கடம்பங்குடி பகுதிகளில் விவசாயிகளின் நெல் வயல்களில் மின்கம்பங்களில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.மேலும் கை தொடும் தூரத்தில் மின்கம்பிகள் செல்வதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் அரசு பள்ளிகளில் 100% சதவீதம்

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதானம் அரசு ஆதிதிராவிடர் நலன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசு பள்ளிகள் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் 2ம் இடம் பிடித்த மாணவி

image

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பள்ளியில் பயிலக்கூடிய ரதிசந்திரிக்கா என்ற மாணவி 593 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

News May 6, 2024

மயிலாடுதுறை: மறைந்த பெண்ணின் இரு கண்களும் தானம்

image

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த கோமதி என்ற பெண்மணி மறைந்த நிலையில் அவரது 2 கண்களும் இன்று தானம் செய்யப்பட்டது.தொடர்ந்து சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் மனுக்கள் மீது விசாரணை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில்,மாநில தகவல் உரிமை ஆணையர்
எம்.செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தினால் அவதியுறும் பொதுமக்களின் நலன் கருதி மயிலாடுதுறை ஊர் காவல் படை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று மயிலாடுதுறையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வட்டார தளபதி அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 6, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம் என கல்வித்துறை சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

மயிலாடுதுறை:நீர் மோர் பந்தல் திறந்து வைத்த ஆதீனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று கோடை வெயிலை ஒட்டி பொதுமக்கள் பக்தர்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு தருமபுரம் ஆதீனம் பங்கேற்று திறந்து வைத்தார்.

News May 5, 2024

மயிலாடுதுறை: ஆதினம் வழிபாடு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு செய்தார். முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

error: Content is protected !!