India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை டெங்கு குறித்து உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை டெங்கு குறித்து உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மூன்று வகுப்பறை மட்டுமே கொண்ட பழமையான பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஸ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஒட்டி கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர் தற்பொழுது மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடல் மீன் வரத்து குறைந்துள்ளது இருப்பினும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டி பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நாட்டு மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் கடலோர ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி குளங்களை தூர்வாரி, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் நடவடிக்கைகள் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருபுவனம் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சரபர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் எஜமான் உத்தரவு பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.