India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.தொடர்ந்து அருகே உள்ள வீட்டின் மாடியில் கண்ணையன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.தொடர்ந்து அருகே உள்ள வீட்டின் மாடியில் கண்ணையன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை, சித்தர்காடு, ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை, CADD CENTRE மற்றும் VERANDA RACE நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சலுகை கட்டணத்தில், தொழில்நுட்ப பயிற்சியும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியும் வழங்க உள்ளது. இவ்வரிய வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து நோயாளிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திர சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் எம்.புனிதவதி என்ற மாணவி 493 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் இடையே மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தருமை ஆதினம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் இப்பள்ளியில் பயிலும் சங்கரி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.27% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.67 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.30% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.