India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டு 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் பதிவேற்றம் செய்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 30.6.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையே மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே இன்று மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் அதன் மீது படர்ந்திருந்த மரக்கிளைகளை முழுமையாக வெட்டி அகற்றினர்.
இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் இதர விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் அதே இணையதள முகவரியில் 31.05.2024 -க்குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் எம்.ஜி.ஆர் ,சிவாஜிகணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பிண்ணனி குரல் இசைத்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பத்மஸ்ரீ சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது உருவப் படத்திற்க்கு மயிலாடுதுறை மாவட்டம் டி.எம்.சவுந்தரராஜன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கவிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் (கிக்) பதிவு செய்வதற்கான சிறப்பு உதவி மையம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மயிலாடுதுறை வேலாயுதம் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மே 23 முதல் ஜூன் 14 வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். தொழிலாளர்கள் இந்த மையத்தை அணுகி கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வசந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மழை மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர்களின் பிள்ளைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி பரிசு தொகை காவலர் சேமநல நிதி கணக்கிலிருந்து இன்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு அவசரமாக இன்று இரத்தம் தேவைப்பட்டது. இதனை அறிந்த மயிலாடுதுறை ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் சந்தானராஜ் உடனடியாக இரத்தம் வழங்கி உதவினார். இதனிடையே சான்றிதழ் காவலருக்கு வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது என வந்த செய்தி தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.