India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் உரம், பசுந்தாள் உர விதைகள், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,புகைப்படம், கைபேசியுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள் மற்றும் அதற்கான சலுகைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தின் உதவி இயக்குநர் விவேக் குமார் யாதவ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்ட நிலையில், மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் ஏவுதளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும்போது சில நேரங்களில் நில அதிர்வு ஏற்படக்கூடும். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 கோவில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியில் சேர 62 வயதிற்குள் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தினை எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். அல்லது நாகப்பட்டினம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசியில் 04365-299765 தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 மற்றும் 21 தேர்வு வாயிலாக 2327 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனவும் , முதல் நிலை தேர்வு வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் மணிமேகலை நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரத்தில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம நபர்கள் தாக்க முற்பட்டால் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.