Mayiladuthurai

News October 5, 2025

மயிலாடுதுறை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 5, 2025

மயிலாடுதுறை: 20 கிலோ புகையிலை பறிமுதல்

image

சீர்காழி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ரிஸ்வான் (21) என்பவர் தனது ஸ்கூட்டரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சீர்காழி போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட் களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைடுத்து அவரை காவல்துறை கைது செய்தனர்.

News October 5, 2025

மயிலாடுதுறை மக்களே இத மறந்துடாதீங்க!

image

மக்களே (07.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.மயிலாடுதுறை வட்டாரம் – HMS திருமண மஹால், கடலங்குடி
2.சீர்காழி நகராட்சி – ராஜேஸ்வரி திருமண மண்டபம், தென்பதி. சீர்காழி
3.குத்தாலம் வட்டாரம் – அறிஞர் அண்ணா திருமண மண்டபம், மேக்கிரிமங்கலம்
4.செம்பனார்கோயில் வட்டாரம் – நயீம் திருமண மண்டபம், திருக்களாச்சேரி
மகளிர் உதவித்தொகை போன்றவை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 5, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு முதல், நாளை காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

மயிலாடுதுறை பாஜகவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கூறைநாடு ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, குறுகிய சாலையின் வழியே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அந்தச் சாலை இரு வழிச்சாலையாக இல்லாத காரணத்தால் ரயில்வே கேட் இருப்பதினால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு மாற்றுப் பாதையை சரி செய்யக்கோரி மனு அளித்துள்ளனர்.

News October 4, 2025

மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுலாம்

image

மயிலாடுதுறை மக்களே.ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News October 4, 2025

மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க

News October 4, 2025

மயிலாடுதுறை: மனுக்களை பெரும் குறைதீர்ப்பு வாகனம்

image

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகிரி, மேலையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் நம்ம பூம்புகார், நம்ம MLA என வாகனத்தில் மூலம் மக்கள் குறைதீர்ப்பு வாகனம் சென்று களத்தில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று உடனடி தீர்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

News October 4, 2025

மயிலாடுதுறை: மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

image

திருவெண்காடு துணை மின் நிலையத்தின் இன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் திட்டமிட்டிருந்த காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் நடைபெறாது. பராமரிப்பு பணிகளுக்கான புதிய தேதி பின்னர் மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

மயிலாடுதுறை: போக்குவரத்து மாற்றம்

image

மயிலாடுதுறை-பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை ரயில்கேகேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டுகளை கடந்த சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மேம்பாலத்தில் மேல்தளபகுதியில் பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளதால் போக்குவரத்து தடை செய்ய திட்டமிப்பட்டு போக்குவரத்து இன்று தடைசெய்யப்பட்டது

error: Content is protected !!