India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 11:00 மணிக்கு நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்
செம்பனார்கோயில் அருகே தவாக நிர்வாகி மணிமாறனை வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் வீரமணி குணசேகரன் முருகன் உள்ளிட்ட 4 பேர் பாலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 7 பேர் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 7) 11 மணி முதல் நாளை (ஜூலை 8) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் பண்ணுங்க.!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு ஆட்சியர் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கீதா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. விருப்பமுள்ளவர்கள் <
தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலை மாவட்டத்தில் உள்ள 13 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974181>>(பாகம் -2)<<>>
விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ 29.8.2025க்குள் விண்ணப்பிக்கலாம். சந்தேகமிருப்பின் 04364 -299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் துவங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.