Mayiladuthurai

News April 15, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 PACKING HELPER காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வது படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 30க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பச்சிளம் குழந்தை பரிதாப பலி

image

செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.

News April 14, 2025

மயிலாடுதுறை : ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 14, 2025

தமிழ் புத்தாண்டுக்கு இது கட்டாயம் செய்ய வேண்டும்

image

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்

News April 14, 2025

தைலகாப்பு அலங்காரத்தில் காட்சி தரும் தோணியப்பர்

image

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாய காட்சியாக தோணியப்பர்-உமா மகேஸ்வரி தாயாராக அருள் பாலிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே தைலக்காப்பு எனும் சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தோனியப்பர் உமாமகேஸ்வரி தாயாருக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

News April 14, 2025

நினைத்ததை நிறைவேற்றும் வதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

image

மயிலாடுதுறையில் அமைந்துள்ளது அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி அமாவாசை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை, கடன் பிரச்சனை, குழந்தை பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டில் இங்கு சென்று வேண்டினால் நினைத்தது நடக்கும். ஷேர் பண்ணுங்க.

News April 14, 2025

கொள்ளிடம் கோயிலில் காவல்துறை மண்டகப்படி-எஸ்.பி. பங்கேற்பு

image

கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் உற்சவத்தின் 11ஆம் நாள் கொள்ளிடம் ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையம் சார்பில் மண்டகப்படி விழா நடைபெறும் அதன்படி இன்று கொள்ளிடம் காவலர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்தனர். மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் ராஜா போலீசார் பொதுமக்கள் விழாவில்பங்கேற்றனர்.

News April 14, 2025

நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

image

மயிலாடுதுறையில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.நாளை முதல் மீனவதொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர். தடைகால மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.

News April 13, 2025

தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்காழி மாணவி

image

சீர்காழி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுபாஷினி என்கிற மாணவி நடப்பு கல்வி ஆண்டில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் 97 மதிப்பெண்கள் எடுத்து உதவித்தொகைக்கு தேர்வு பெற்றுள்ளார். தேர்வில் சிறந்து விளங்கியதற்காக மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News April 13, 2025

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரர் கோயில்

image

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வைத்தீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!