India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாறுகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், செம்பனார்கோவில் – இந்திரபுரி, பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, மணல்மேடு – நாகநாதபுரம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார் என அழைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 9) 11 மணி முதல் நாளை (ஜூலை 10) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்ட எஸ்.பி . பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 4 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெறும் இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003354>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை.
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <
மயிலாடுதுறையில் குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் 15,880 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்படவேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என திருச்சி தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.