Mayiladuthurai

News October 6, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு

image

மயிலாடுதுறை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. மயிலாடுதுறை பெசன்ட் நகர் கண்ணார தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 6 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தனர்.

News October 6, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு மற்றும் ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (07.10.20.2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், வடவாமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி – மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 6, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வங்கியில் இருந்து பேசுவதாகவும் குறைந்த வட்டியில் உடனடியாக லோன் தருவதாகவும் பொதுமக்கள் தங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News October 6, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2025

மயிலாடுதுறை: மேம்பாலத்தை கட்டி முடிக்க உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் உள்ள சாரங்கபாணி நினைவு பாலம் மேற்பகுதி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மயிலாடுதுறை வருவாய் கோட்டாச்சியர் விஷ்ணுபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளுமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

News October 5, 2025

மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 5, 2025

மயிலாடுதுறை: இலவச அரிசி, கோதுமை பெற APPLY..!

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். SHARE பண்ணுங்

News October 5, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் வாகனங்கள் திருவிழந்தூர் ஆழ்வார்குளம் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி பெருமாள்கோயில் மேலவீதி அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம். திருவிழந்தூர் பள்ளியிலிருந்து பெருமாள் கோயில் தெற்கு வீதி, ஆழ்வார்குளம் சந்திப்பு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்லலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது

News October 5, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> .
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க

News October 5, 2025

மயிலாடுதுறை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!