India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளில் இருந்து சமரசத்திற்கு எடுத்து கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள் என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகளுக்கு சமரச தீர்வின்படி மொத்தம் 1,097 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 26 லட்சத்து 70000 இழப்பீடு மற்றும் தீர்வுத்தொகை பெறப்பட்டது
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீபாய்ந்த அம்மன் கோயில் அருகில் காவிரி ஆற்றின் கரையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த வீரமணி (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
மயிலாடுதுறை மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click<
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
மயிலாடுதுறை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று சந்தேகம் உள்ளதா? மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க!<
மயிலாடுதுறை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் அலுவலர்கள் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது.
மயிலாடுதுறை: இணையதளங்களில் மிக குறைந்த விலையில் கார்,பைக் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்களின் உண்மை தன்மையை அறிந்து பொருட்களை வாங்கவும் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும்போது பின் தொடர்ந்து சென்று பேசியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தில்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.